ஹிமாச்சலப்பிரதேசத்தில் கனமழையால் வீடு இடிந்தது … இடிபாடுகளில் சிக்கி 4 சிறுமிகள் பரிதாப பலி ..

ஹிமாச்சலபிரதேசத்தில் கனமழையால் வீடு இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி 4 சிறுமிகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஹிமாச்சல பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இந்நிலையில் சர்மாவூர் என்ற மாவட்டத்தில் கிஜிவாடி கிராமத்தில் வீடு ஒன்று இடிந்தது. இதில் மம்தா(27), மற்றும் அவரது மகள்கள் அராங் (2), அமீஷா (6) இஷிதா(8) மற்றும் அண்ணன் மகள் அகான்ஷிகா (7).. ஆகியோர் இடிபாடுகளில் சிக்கினர்.

Heavy rains in Himachal 1664188577523 1664188577676 1664188577676

தகவல் அறிந்துவந்த தீயணைப்பு அதிகாரிகள் மீட்கும் பணியில் ஈடுபடடனர். இதனிடையே மம்தா மற்றும் அவரது கணவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும்போது 4 பேரையும் உடல்களாக மீட்டது அப்பகுதிமக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இன்னும் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. பலியானவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெய்ராம் தாகூர் உறுதி அளித்துள்ளார். இதே போல குல்லு என்ற இடத்தில் பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்த விபத்தில் 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதில் 3 பேர் ஐ.ஐ.டி. மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

vehicle fall

5 பேர் சம்பவ இடத்திலும் 2 பேர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார்.

Next Post

’’கியூட்’’ தேர்வு முடிவுகள் வெளியானது…

Mon Sep 26 , 2022
புதிய கல்விக் கொள்கையின்படி மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு ’கியூட்’ முடிவுகள் வெளியாகி உள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகள் புதிய கல்விக் கொள்கையின்படி நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய பல்கலைக்கழங்களில் கலை மற்றும் அறிவியல் மற்றும் வர்த்தகம், வணிக மேலாண்மை துறைகளில் சேரவும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கும் நுழைவுத் தேர்வாக கியூட் (CUET) நடத்தப்படுகின்றது . இந்தத் தேர்வில் தேர்ச்சியடைந்தால் பல்கலைக்கழகங்களில் படிக்கும் வாய்ப்பை மாணவர்கள் பெற முடியும். […]
CUET PG Score Card Download link

You May Like