துபாய்க்கு நடிகர் தனுஷ் ஃபேமிலி டூர்!!

நடிகர் தனுஷ் குடும்பத்துடன் சில நாட்கள் மகிழ்ச்சியாக கழித்து வர துபாய்க்கு சென்றுள்ளதாக புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் தனுஷ் ’கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கழிக்க திட்டமிட்டுள்ளார். அதே நேரத்தில் அடுத்த படத்திற்காகவும் பணியில் ஈடுபட்டுள்ளார்.இதற்காக தனுஷ் குடும்பத்துடன் துபாய்க்கு சென்றுள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.


சில நாட்கள் அங்கு கழித்த பின்னர் மீண்டும் சென்னைக்கு திரும்ப உள்ளார் தனுஷ். இந்நிலையில் துபாய் விமான நிலையத்தில் நடிகை மாளவிகா ஸ்ரீநாத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. துபாயில் நடிகர் தனுஷை கண்ட பலரும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நடிகை மாளவிகாவும் மகிழ்ச்சியுடன் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.

dhanush malavika

கடந்த சில மாதங்களாக விவாகரத்து விவகாரத்தில் களையிழந்து காணப்பட்ட தனுஷ் குடும்பம் சமீபத்தில் ஒன்று சேர்ந்தவுடன குதூகலம் பிறந்துள்ளது. எனவே அந்த சந்தோஷத்தையும் சேர்த்து கொண்டாட சரியான நேரம் கிடைத்துள்ளது.

Next Post

மோர்பி பாலம் விபத்தில் டிக்கெட் விற்பனையாளர் உள்பட 9 பேர் அதிரடி கைது…

Mon Oct 31 , 2022
பாலம் இடிந்து விபத்துக்குள்ளான 24 மணி நேரத்திற்கு பின்னர் 9 பேர் இந்த வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத்தில் மோர்பி பகுதியில் நடந்த விபத்தில் இதுவரை 134 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலம் இடிந்த விபத்து நேற்று மாலை நடந்த நிலையில் இன்று 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒரேவா நிறுவனத்தின் அதிகாரிகள், டிக்கெட் விற்பனை செய்தவர்கள், பாதுகாவலர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். […]
FgZz7GLVEAAn cC

You May Like