நடிகர் பிரபு சிறுநீரக பிரச்சனை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்
நடிகர் பிரபு சிறுநீரக பிரச்சனை காரணமாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரகத்தில் கல் இருப்பது கண்டறியப்பட்டு யூரித்ரோஸ் கோபி லேசர் அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டனர்.
அறுவை சிகிச்சைக்கு பின் நடிகர் பிரபு நலமாக உள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளனர்.
பிரபு தமிழகத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ்மொழி திரைப்படங்களே அதிகம். நடிகர் பிரபு விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்கள் சமூகத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.