#Flash: நடிகர் ஸ்ரீ காந்த் கைது.. ரூ.4 லட்சத்திற்கு போதை பொருள் வாங்கியது அம்பலம்..

image 80 1

கொக்கைன் போதைப் பொருள் பயன்படுத்திய புகாரில் நடிகர் ஸ்ரீ காந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த மாதம் ஒரு தனியார் மதுபான விடுதியில் ஏற்பட்ட தகறாரில் அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத், மற்றொரு அதிமுக பிரமுகர் அஜய் வாண்டையார், பிரபல ரவுடி சுனாமி சேதுபதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும், பிரசாத், போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.


அவர் போதைப் பொருளை யாரிடம் வாங்கினார், யாருக்கெல்லாம் சப்ளை செய்தார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், பிரசாத் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு கொக்கைன் வழங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த வழக்கில் கைதான பிரசாத் நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு கொக்கைன் வழதுங்கியதாக விசாரணையில் தெரியவந்ததால், நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை செய்தனர். மேலும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனையும் செய்தனர். அதில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியானது..

இந்த நிலையில் கொக்கைன் போதைப் பொருள் பயன்படுத்திய புகாரில் நடிகர் ஸ்ரீ காந்த் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 4 லட்சம் கொடுத்து ஸ்ரீ காந்த் போதை பொருள் வாங்கி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

போதை பொருள் பயன்படுத்தியது, நண்பர்களுக்கு வாங்கிக் கொடுத்தது, பொது இடங்களில் போதை பொருள் பயன்படுத்தியது, போதை பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்தது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுங்கம்பாக்கம் அருகே கடந்த 17-ம் தேதி கொக்கைனுடன் ஏற்கனவே கைதான பிரதீப் தந்த தகவலின் பேரி நடிகர் ஸ்ரீ காந்த் சிக்கி உள்ளார். பப் மோதல் தொடர்பான வழக்கில் பிரதீப் தந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஸ்ரீகாந்த் 40 முறை போதை பொருள் வாங்கி உள்ளதாகவும், அதற்கான பணத்தை பீரதீப் பெற்றதாகவும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

போதை பொருள் தொடர்பாக ரூ.4.72 லட்சத்திற்கு பண பரிவர்த்தனை நடந்துள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஸ்ரீகாந்தின் ஜி-பேர் பரிவர்த்தனையை ஆய்வு செய்ததில் இது அம்பலமாகி உள்ளது. பொதுவாக போதைப்பொருள் வழக்கில் கைதானால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.

English Summary

Actor Srikanth has been arrested on charges of cocaine use.

RUPA

Next Post

“உங்க மேல இருந்த மரியாதையே போச்சு..” ஆபாச டான்ஸ் மூவ்.. பிரபுதேவாவை விளாசும் நெட்டிசன்கள்..

Mon Jun 23 , 2025
நடிகர், இயக்குனர் மற்றும் நடன இயக்குனர் என பன்முகங்களை கொண்டவர் பிரபுதேவா. இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடன புயல் என்று அழைக்கப்படும் என்று பிரபுதேவா தனது அற்புதமான நடன அசைவுகளுக்கு பெயர் பெற்றவர். இவரின் நடனத்திற்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் பிரபுதேவா சமீபத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். பிரபுதேவாவின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ‘ஆபாசமான’ நடன அசைவுகளை ஆடும். இது அவரது ரசிகர்களை […]
AA1HeDwS 1

You May Like