ஒன்றரை வருடங்களாக கொகைன் போதைப் பொருள் பயன்படுத்திய ஸ்ரீகாந்த்.. பல பிரபலங்களுக்கும் தொடர்பு?

44067562 chennai 07 1 1

போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் ஒன்றரை வருடங்களாக கொகைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தனியார் பாரில் நடந்த அடிதடி வழக்கில் பிரதீப் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரின் செல்போனை ஆய்வு செய்ததில் தீங்கிரை என்ற படத்தின் மூலம் நடிகர் ஸ்ரீ காந்த் உடன் பழக்கம் ஏற்பட்டதும், அதன் மூலம் பிரதீப் குமாரிடம் இருந்து ஸ்ரீ காந்த் கொகைன் போதை பொருள் வாங்கியதும் தெரியவந்தது.


இதையடுத்து ஸ்ரீ காந்திடம் நடத்தபப்ட்ட ரத்த மாதிரி பரிசோதனையில் அவர் போதை பொருள் பயன்படுத்தியது உறுதியானது. இதை தொடர்ந்து ஸ்ரீ காந்த் நேற்று கைது செய்யப்பட்டார். போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் ஸ்ரீ காந்த் 3வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கானா நாட்டை சேர்ந்த ஜான் என்பவர் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

நடிகர் ஸ்ரீ காந்த் ஒரு கிராம் ரூ.12,000 என்ற விலையில் மொத்தம் ரூ.4 லட்சம் வரை பணப்பரிமாற்றம் நடைபெற்றதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீ காந்த் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு 7-ம் தேதி வரை நீதிமன்றம் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரை காவலில் இருந்து எடுத்து மீண்டும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் ஒன்றரை வருடங்களாக கொகைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. கேளிக்கை விடுதிகளில் நடக்கும் பார்ட்டிகளில் ஸ்ரீ காந்த் போதை பொருளை பயன்படுத்தியதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஸ்ரீ காந்தின் நட்பு வட்டாரங்களில் உள்ள பிரபலங்கள் யாரேனும் இந்த போதை பொருளை பயன்படுத்தினார்களா? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை செய்ய உள்ளனர். திரைத்துறையில் பல பிரபலங்களும் போதை பொருள் பயன்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது என்பதால் மேலும் பல பிரபலங்கள் இதில் சிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அதே போல் நடிகர் கிருஷ்ணாவுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவரிடமும் விசாரணை நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

போதை பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் ஸ்ரீ காந்துடன் வேறு நடிகர்களுக்கு தொடர்பா என்று விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் ஸ்ரீ காந்த் யார் மூலம் போதைப் பொருள் வாங்கி உள்ளார் என்பது குறித்தும் விசாரிகப்பட உள்ளது.

Read More : Wow.. சென்னையில் பஸ், மெட்ரோ, ரயில் மூன்றுக்கும் ஒரே டிக்கெட்.. எப்போது முதல்?

English Summary

In the drug use case, information has emerged during the investigation that actor Srikanth had been using cocaine for one and a half years.

RUPA

Next Post

"போர் நிறுத்தம் அமலில் இருக்கு.. அதை மீறாதீங்க.." ஈரானின் தாக்குதலுக்கு பிறகு டிரம்ப் கருத்து..

Tue Jun 24 , 2025
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று தெரிவித்தார். ஆனால் போர் நிறுத்தம் ஏற்படவில்லை என்று ஈரான் கூறிய நிலையில் தொடர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து மத்திய கிழக்கில் உள்ள இரண்டு பரம எதிரிகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீற வேண்டாம் என்று ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தி உள்ளார். “போர் நிறுத்தம் […]
AFP 20250616 62LH9ND v1 HighRes G7Summit 1 1750233809 1

You May Like