வீட்டை தொடர்ந்து அப்பார்மெண்டை வாங்கிய நடிகர் சூர்யா..!! எத்தனை கோடி தெரியுமா..?

தமிழ் சினிமாவில் இன்று கோடிகளில் சம்பளம் வாங்கும் சூர்யா, சினிமாவில் அறிமுகமான புதிதில், நடிப்பிற்காக பல்வேறு விமர்சனங்களை பெற்றவர். தன்னுடைய தோல்விகளை வெற்றிப்படிகட்டுகளாக மாற்றி, விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சில ஆண்டுகளிலேயே நந்தா, பிதாமகன் உள்ளிட்ட படங்களில் நடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். தற்போது தன்னுடைய நடிப்பு பசிக்கு தீனிபோடும் வகையில், சவாலான கதாபாத்திரங்களையே அதிகம் தேர்வு செய்து நடித்து வரும் சூர்யா, ‘சூரரை போற்று’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார். 


நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் அழுத்தமான கதைக்களம் கொண்ட படங்களையும், சமூக அக்கறை கொண்ட படங்களையும் தன்னுடைய 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார். திரையுலகை தாண்டி, அகரம் என்கிற அறக்கட்டளை மூலம் பல்லாயிரக்கனான குழந்தைகளை படிக்க வைத்து, நல்ல மனிதர் என்பதையும் நிரூபித்துள்ளார். இந்நிலையில், தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வரலாற்று சிறப்பம்சம் கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வெளியாவதற்கு முன்பாகவே சுமார் ரூ.500 கோடி பிஸ்னஸ் செய்துள்ளதாக சில பிரபலங்கள் உறுதி செய்துள்ளனர்.

திரைப்பட பணிகள் ஒருபக்கம் பிசியாக போய் கொண்டிருந்தாலும் நடிகர் சூர்யா திடீரென, கடந்த ஓரிரு மாதத்திற்கு முன், மும்பையில் பல கோடி ரூபாய் மதிப்பில் வீடு வாங்கிக் கொண்டு, மனைவி மற்றும் குழந்தைகளுடன் செட்டில் ஆனார். இதில் அவரின் தந்தை சிவகுமாருக்கு உடன்பாடு இல்லை என்றாலும் மனைவி ஜோதிகாவின் வற்புறுத்தல் காரணமாகவே இந்த மாற்றம் என கூறப்பட்டது. இதை தொடந்து, மும்பையில் பிரபலங்கள் பலர் பிளாட் வாங்கி வைத்திருக்கும் அப்பார்ட்மென்டில் சூர்யா புதிய பிளாட் ஒன்றை சுமார் 68 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிளாட் 9,000 சதுர அடி வரை இருக்கிறதாம். இதில் கார்டன் மற்றும் பல கார்கள் பார்க்கிங் செய்யும் வசதிகளும் உள்ளதாக கூறப்படுகிறது. குழந்தைகள் பர்த்டே பார்ட்டி, விசேஷங்கள், கொண்டாட்டங்கள் போன்றவற்றை செல்லபிரேட் செய்வதற்காகவே இந்த அபார்ட்மெண்ட்டை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

CHELLA

Next Post

அதிர்ச்சி..!! சிறுநீரக தொற்றால் அவதிப்படும் பிரபல நடிகை..!! இன்ஸ்டாவில் ஆதாரத்துடன் பதிவு..!!

Sat Mar 18 , 2023
சமீப காலமாக திரையுலகில் நடிகைகள் பலரும் ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகை சமந்தா தோல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் தான் மீண்டுள்ளார். அவரை அடுத்து நடிகை மம்தா மோகன்தாஸ், தான் ‘விட்டிலிகோ’ என்ற ஆட்டோ இம்யூன் நோயால் பாதித்துள்ளதாக இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இப்படி பல நடிகைகள் தாங்கள் சில நோய் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல இந்தி சீரியல் […]
அதிர்ச்சி..!! சிறுநீரக தொற்றால் அவதிப்படும் பிரபல நடிகை..!! இன்ஸ்டாவில் ஆதாரத்துடன் பதிவு..!!

You May Like