நடிகர் விஜய் ஒருபுறம் நடிப்பில் பிஸியாக இருந்தாலும், மறுபுறம் தனது அரசியல் ஆசையையும் வளர்த்து வருகிறார். அந்தவகையில், சமீபகாலமாக அவரின் மக்கள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும், செயல்பாடுகள் கூடிய விரைவில் விஜய் அரசியலில் கால் பதிப்பதற்கான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்கள் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி இருந்த விஷயம், விஜய்யின் அரசியல் பயணத்துக்கான தொடக்கப்புள்ளியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது விஜய் குறித்து அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
அதாவது விஜய் தனது 68-ஆவது படத்தை முடித்த கையோடு சினிமாவிலிருந்து விலகி 2, 3 ஆண்டுகள் நடிப்பதை நிறுத்தி விட்டு அரசியலில் ஈடுபட முடிவெடுத்துள்ளாராம். இதன் பின்னர் 3 ஆண்டுகளுக்கு பிறகே விஜய் மீண்டும் நடிக்க வருவாராம். இந்தத் தகவல் எந்தளவிற்கு உண்மை என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.