நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு.. நடிகர் திலீப்-க்கு புதிய சிக்கல்..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

dileep 1

கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி பிரபல நடிகை கேரவனில் சென்று கொண்டிருந்த போது, காரில் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. கேரளாவில் பிரபல நடிகையை 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி பிரபல நடிகை கேரவனில் சென்று கொண்டிருந்த போது, காரில் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..


இதுகுறித்து நடிகை அளித்த புகாரின் பேரில் மாநில குற்றப்புலன் விசாரணை பிரிவு காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.. விசாரணையில் சுனில் குமார் உள்ளிட்ட சிலர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.. அவரை போலீசார் கைது செய்தனர்.. இந்த வழக்கில் மலையாள நடிகர் திலீப்புக்கும் நடிகைக்கும் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக திலீப் திட்டம் தீட்டி நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தெரியவந்தது.. நடிகர் திலீப், சுனில் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.. இந்த வழக்கு எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.. எனினும் இந்த வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும், திட்டமிட்டு தன்னை சிக்க வைத்ததாகவும் திலீப் கூறியிருந்தார்..

இது தொடர்பாக நடிகர் திலீப் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த  வழக்கு விசாரணை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது..

8 ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில் இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது.. அதன்படி இந்த வழக்கில் இருந்து நடிகர் திலீப் விடுவிக்கப்பட்டார்.. இந்த வழக்கில் நடிகர் திலீப் ஏ8 குற்றவாளி என்பதால் அவரை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. திலீப் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவர் விடுவிக்கப்பட்டார்.. 8 பேர் மீது நடைபெற்று வந்த இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.. இதையடுத்து நடிகர் திலீப் உள்ளிட்ட இருவர் விடுதலை செய்யப்பட்டனர்..

இந்த நிலையில் நடிகர் திலீப் விடுவிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு குறித்து நடிகர் திலீப் உள்ளிட்ட 2 பேரும் பதிலளிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. வழக்கில் இருந்து தீலீப் விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த உத்தரவு புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

Read More : ” புத்தகம் திரும்பப் பெறப்பட்டது”: நீதித்துறை குறித்த சர்ச்சை பாடம்.. கு பொது மன்னிப்பு கோரிய NCERT.!

RUPA

Next Post

“எல்லாத்தையும் விட்டுட்டு வந்துட்டேன்.. இனி அரசியலை தவிர வேறு எதுவும் இல்லை..” வேட்பாளர் நேர்காணலில் விஜய் உருக்கம்..!

Tue Mar 10 , 2026
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக முதன்முறையாக களமிறங்க உள்ளது.. மற்ற கட்சிகளை போலவே தவெகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.. அந்த வகையில் தவெக சார்பில் கடந்த 6-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது.. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் அறிவித்த போதிலும் எந்த கட்சியும் விஜய் உடன் கூட்டணி சேர முன்வரவில்லை.. காங்கிரஸ் கட்சியில் சிலர் மட்டும் […]
tvk vijay n 4

You May Like