பணக்கார பட்டியலில் இந்தியர்களில் ஒருவரான அதானி சமீபத்தில் மாஸ்டர்திட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மட்டுமின்றி பார்தி ஏர்டெல் நிறுவனம் கூட ஜஸ்ட் மிஸ் ஆனது.
மாஸ்டர் திட்டத்தில் ஜியோ , ஏர்டல் எப்படி தப்பித்தது என பார்க்கலாம். யாருமே எதிர்பார்க்காதவகையில் 2022 ம் ஆண்டு அலைக்கற்றைகளை அதானி குழுமம் ஏலத்தில் எடுத்தது . இது பிற போட்டி நிறுவனங்களுக்கு சற்றே அதிர்ச்சிதான். டெலிகாம் துறை தொடர்பான ஒரு ஏலத்தில் திடீரென்று அதானி குழுமம் பங்கேற்கவும், இந்நிறுவனம் டெலிகாம் நிறுவனம் ஒன்றை தொடங்கலாம் என்கிற சலசலப்பு ஏற்ப்பட்டது! இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்.. அம்பானி எப்படி திடீரென்று ரிலையன்ஸ் ஜியோவை அறிமுகம் செய்து, இந்திய டெலிகாம் துறைக்குள் நுழைந்தாரோ.. அதே போல அதானியும் நுழைகிறார் என்று பேச்சுகள் அடிபட்டன!
அதானி மட்டும் டெலிகாம் நிறுவனம் ஒன்றை அறிமுகம் செய்தால்.. அதுவும் 5ஜி சேவைகள் அறிமுகமாகி உள்ள இந்த நேரத்தில்.. அது நிச்சயம் வேற லெவல் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது; குறிப்பாக அம்பானிக்கும் அதானிக்கும்! ஆனால் அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் வெளியிட்டுள்ள ஒரு சமீபத்திய தகவலை வைத்து பார்க்கும் போது.. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மட்டுமின்றி பார்தி ஏர்டெல் நிறுவனமும் கூட சைக்கிள் கேப்பில் தப்பித்துள்ளது போல் தெரிகிறது!
அது என்னவென்றால், அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ஆனது நுகர்வோர் வணிகத்தில் குதிக்க விரும்பவில்லையாம். மாறாக அது பி2பி பக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாம். இதை ஒரு தகவல் என்று கூறுவதை விட, ஒரு வகையான விளக்கம் என்றே கூறலாம். அதாவது இப்போதைக்கு, அதானி குழுமமானது இந்தியாவில் நடக்கும் டெலிகாம் துறை யுத்தங்களுக்கு தயாராக இல்லை என்பதை மறைமுகமாக கூறி உள்ளது!
இப்போதைக்கு ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களிடம் இருந்து சற்றே விலகி இருப்பது தான் அதானிக்கும் நல்லது. ஏன் என்பதற்கு 2 முக்கியமான காரணங்களை முன்வைக்கலாம். ஒன்று- ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களுமே, ஏற்கனவே நன்கு அறியப்பட்ட, நிறுவப்பட்ட பிராண்டுகள் ஆகும்!
ஆம்! 5G சேவைகள் ஆனது உடனடியாக மிகப்பெரிய வளர்ச்சியைக் காணப் போவதில்லை. எனவே இதில் அதிக பணத்தை முதலீடு செய்யும் எவருமே வருமானத்திற்காக நீண்ட காலத்திற்கு காத்திருக்க வேண்டும். அதுவரையிலாக முகேஷ் அம்பானி மற்றும் பார்தி மிட்டலின் “வியாபார தந்திரங்களுக்கு” மத்தியில் அதானி குழுமம் தாக்குப்பிடிக்கவும் வேண்டும்!
அதானி குழுமம் ஏற்கனவே பல விமான நிலையங்கள், டேட்டா சென்டர்கள் மற்றும் பலவற்றை அதன் போர்ட்ஃபோலியோவின் கீழ் கொண்டுள்ளது. அந்த வரிசையில் சேர்ந்துள்ள 5G அலைக்கற்றைகள் ஆனது, அதன் சொந்த நிறுவனங்களின் கனெக்டிவிட்டி சர்வீஸ்களை மேம்படுத்துவதிலும், பிற நிறுவனங்களுக்கும் அதே சேவைகளை வழங்குவதிலும் கவனம் செலுத்தலாம்!