விவசாய கடன், நகை கடன் தள்ளுபடி.. எத்தனை கோடி நிதி ஒதுக்கீடு..? பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு..

தமிழக பட்ஜெட்டில் விவசாய கடன் தள்ளுபடிக்கு ரூ.2,393 கோடி நிதியும், நகைக்கடன் தள்ளுபடிக்கு ரூ.1000 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை இ பட்ஜெட்டாக தாக்கல் செய்து வருகிறார்.. அப்போது பேசிய அவர் “ 2006 முதல் 2011 வரை சராசரி 8 சதவீதமாக மாநிலத்தின் சொந்த வரிவருவாய், அடுத்த 10 ஆண்டுகள் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு, 2020-21-ல் 5.58 சதவீதமாக குறைந்தது.. கடந்த 2 ஆண்டுகளாக இந்த அரசு எடுத்த முயற்சிகளின் பலனாக இந்த விகிதம் 6.11 சதவீதமாக உயர்ந்துள்ளது..” என்று தெரிவித்தார்..


2023-24 தமிழக பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள் :

  • 25 இடங்களில் நாட்டுப்புற, கலை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்..
  • 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் விரிவுப்படுத்தப்படும்
  • அனைத்து மாவட்டங்களிலும் நடப்பாண்டிலும், புத்தக கண்காட்சி தொடர்ந்து ரூ.10 கோடியில் நடத்தப்படும்
  • புலம் பெயர்ந்தவர்களுக்கும் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் சிகிச்சையளிக்கப்படும்
  • வரும் நிதியாண்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்படும்.
  • ரூ.110 கோடியில், 4,5 வகுப்புக்கும் எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவாக்கப்படும்..
  • நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வித்துறைக்கு ரூ.6967 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..
  • சென்னை அம்பத்தூரில் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு மையம் ரூ.120 கோடியில் அமைக்கப்படும்..
  • அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்திற்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • ரேஷன் கடைகளில் உணவுபொருட்களுக்கான மானியம் வழங்க ரூ.10,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..
  • முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ரூ.500 கோடி அனைத்து அரசு தொடக்க பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.
  • நடப்பு நிதியாண்டில் மகளிர் சுய உதவிக்குழுவுக்கு ரூ.30,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது..
  • விவசாய கடன் தள்ளுபடிக்கு ரூ.2,393 கோடி நிதியும், நகைக்கடன் தள்ளுபடிக்கு ரூ.1000 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு 7,000 வீடுகள் கட்ட, ரூ.233 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
  • வயது முதிர்ந்த 591 தமிழ் அறிஞர்களுக்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்கப்படும்
  • கிண்டியில் அமைக்கப்பட்டு வரும் ‘கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை’ இந்த ஆண்டு திறந்துவைக்கப்படும்.
  • 211 தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ‘ மக்களை தேடி மருத்துவம் திட்டம்’ விரிவுப்படுத்தப்படும்
  • பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட ரூ.1500 கோடி ஒதுக்கீடு
  • தமிழ்நாட்டை சேர்ந்த படைவீரர்கள் குடுபத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகை இருமடங்காக , ரூ. 40 லட்சமாக உயர்த்தப்படும்.

1newsnationuser1

Next Post

குட்நியூஸ்.. கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.. தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு..

Mon Mar 20 , 2023
கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.. 2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை இ பட்ஜெட்டாக தாக்கல் செய்து வருகிறார்.. அப்போது பேசிய அவர் “ 2006 முதல் 2011 வரை சராசரி 8 சதவீதமாக மாநிலத்தின் சொந்த வரிவருவாய், அடுத்த 10 ஆண்டுகள் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு, 2020-21-ல் […]
1 metro

You May Like