கடந்த சில ஆண்டுகளில் நாட்டையே உலுக்கிய 10 விமான விபத்துகள் குறித்து தற்போது பார்க்கலாம்..
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விமான விபத்தில் இதுவரை 133 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்தியாவில் நடந்த மோசமான விமான விபத்துகளில் ஒன்றாக அகமதாபாத் விபத்து மாறி உள்ளது. கடைசியாக 2020 ஆம் ஆண்டில் கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த சில ஆண்டுகளில் நாட்டையே உலுக்கிய 10 விமான விபத்துகள் குறித்து தற்போது பார்க்கலாம்..
ஆகஸ்ட் 7, 2020, கோழிக்கோடு விமான விபத்து: துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 1344, கோழிக்கோட்டு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இதில் 21 பேர் உயிரிழந்தனர்.. ஈரமான ஓடுபாதையில் இருந்து சறுக்கிய விமானம் இரண்டாக உடைந்தது.
மே 22, 2010, மங்களூர் விமான விபத்து: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 812 மங்களூரில் ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இந்த விமானம் ஒரு பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது.158 பேர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
ஜூலை 17, 2000, பாட்னா விமான விபத்து: அலையன்ஸ் ஏர் விமானம் 7412 பாட்னாவில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இதில் 60 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.. விமானியின் பிழை காரணமாக கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்கு காரணம்.
நவம்பர் 12, 1996, சார்கி தாத்ரி விமான விபத்து: சவுதி அரேபிய ஏர்லைன்ஸ் போயிங் 747 மற்றும் கஜகஸ்தான் ஏர்லைன்ஸ் இலியுஷின் 76 டெல்லி அருகே மோதி விபத்துக்குள்ளானது. இரு விமானங்களிலும் இருந்த 349 பேரும் உயிரிழந்தனர். விமானியின் பிழை மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் தவறான தொடர்பு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டது.
ஏப்ரல் 26, 1993, அவுரங்காபாத் விமான விபத்து: இந்தியன் ஏர்லைன்ஸ் 491 என்ற விமானம், அவுரங்காபாத்தில் இருந்து புறப்பட்ட பிறகு விபத்துக்குள்ளானது. இந்த விமானம் மின் கம்பிகளில் மோதியதில் 55 பேர் உயிரிழந்தனர்.
ஆகஸ்ட் 16, 1991, இம்பால் விமான விபத்து: இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் இம்பால் அருகே விபத்துக்குள்ளானது, அதில் பயணித்த 69 பேரும் உயிரிழந்தனர்.
பிப்ரவரி 14, 1990, பெங்களூரு விமான விபத்து: இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 605, ஏர்பஸ் A320, பெங்களூருவை நெருங்கும் போது விபத்துக்குள்ளானது, 92 பேர் உயிரிழந்தனர்..
அக்டோபர் 19, 1988, அகமதாபாத் விமான விபத்து: இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 113 அகமதாபாத்தில் விபத்துக்குள்ளானது, 133 பேர் உயிரிழந்தனர்..
ஜூன் 21, 1982, பம்பாய் விமான விபத்து: ஏர் இந்தியா விமானம் 403 பம்பாய் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது, 17 பேர் இதில் உயிரிழந்தனர்..
ஜனவரி 1, 1978, பம்பாய் விமான விபத்து: ஏர் இந்தியா விமானம் 855, போயிங் 747 மும்பையில் இருந்து புறப்பட்ட பிறகு அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 213 பேரும் உயிரிழந்தனர்..
Read More : ஏர் இந்தியா விமானத்தில் இருந்த 242 பேரும் பலி என அச்சம்.. உலகமே துயரத்தில் ஆழ்ந்துள்ளது..