சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள்! என்ன காரணம்?

admk mla

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.. 4 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் முதல் நாளான நேற்று மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 8 பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.


கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபுசோரன், நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. 2-ம் நாளான இன்று 2025-26 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று கருப்பு பட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்துள்ளனர்.. கரூர் கூட்ட நெரிசல், கிட்னி முறைகேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கையில் கருப்பு பட்டை அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் அணிந்து வந்துள்ளனர்.. கிட்னி முறைகேடு குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.. அதே போல் கரூர் சம்பவத்திற்கு அரசின் தோல்வியே காரணம் என்று கூறி வருகிறது.. இந்த சூழலில் தமிழக அரசை கண்டிக்கும் வகையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து வந்துள்ளனர்..

Read More : ஆட்சியில் பங்கு.. திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் கூட்டணி கட்சிகள்..! ஆடிப்போன மு.க.ஸ்டாலின்.. என்ன செய்யப்போகிறார்..?

RUPA

Next Post

எண்ணற்ற நன்மைகளை வழங்கும் நெல்லிக்காய்.. ஆனா இவர்கள் தவறுதலாக கூட அதை சாப்பிடக் கூடாது!

Wed Oct 15 , 2025
நெல்லிக்காய் புளிப்பு மற்றும் சற்று கசப்பான சுவை கொண்ட ஒரு பழமாகும். இது ஆயுர்வேத மருத்துவத்திலும் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. நெல்லிக்காய் வைட்டமின் சி மற்றும் பிற சேர்மங்களால் நிறைந்துள்ளது. நெல்லிக்காய் சாப்பிட்டால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.. இதய ஆரோக்கியம், சரும ஆரோக்கியம், எடை குறைப்பு என பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.. இருப்பினும், இது அனைவருக்கும் ஏற்றது அல்ல, மேலும் சிலருக்கு தீங்கு விளைவிக்கும். சில உடல்நலப் பிரச்சனைகள் […]
amla

You May Like