ஏர் இந்தியா விமான விபத்து.. இதுவரை 30 பேர் உயிரிழப்பு.. பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அச்சம்..

air india crash

குஜராத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் இதுவரை சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகே இன்று மதியம் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. 2 விமானிகள் மற்றும் 10 கேபின் பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்துள்ளனர். அனுபவமிக்க கேப்டன் சுமீத் சபர்வால் தலைமையில் முதல் அதிகாரி கிளைவ் குந்தர் தலைமையில் இந்த விமானம் இயங்கி வந்ததாக விமான போக்குவரத்து மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அகமதாபாத் விமான நிலையம் மூடப்பட்டது.


அகமதாபாத்தில் இருந்து மதியம் 1.38-க்கு மணிக்கு லண்டனுக்கு புறப்பட்ட இந்த விமானம் புறப்பட்ட 5 நிமிடங்களுக்குள் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையத்திற்கு அருகே மேகனிநகர் என்ற குடியிருப்பு பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விமானம் வீடுகளின் மேல் விழுந்ததால் வீடுகளில் இருந்தவர்களும் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. விமான விபத்து குறித்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மாநில உள்துறை அமைச்சர் மற்றும் காவல்துறை ஆணையரிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். மீட்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்திய அவர் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக அறிவித்தார்.

அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர் “ நாங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறோம். நான் தனிப்பட்ட முறையில் நிலைமையைக் கண்காணித்து வருகிறேன், மேலும் அனைத்து விமானப் போக்குவரத்து மற்றும் அவசரகால மீட்பு நிறுவனங்களும் விரைவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்,” என்று கூறினார்.

மீட்புக் குழுக்கள் விரைந்துள்ளன. மருத்துவ உதவி மற்றும் நிவாரண உதவி சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. “எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் விமானத்தில் உள்ள அனைவருக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் உள்ளன” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் ஏர் இந்தியா விமான விபத்தில் ஏற்பட்ட பலி எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த விமான விபத்தில் இதுவரை சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். 242 பேர் இதில் பயணித்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Read More : குஜராத் : விபத்துக்குள்ளான விமானத்தில் முன்னாள் முதலமைச்சர் பயணம்?

RUPA

Next Post

டிகிரி முடித்தால் போதும்.. கை நிறைய சம்பளம்.. மத்திய அரசு ஊழியராக செம சான்ஸ்..!! விட்றாதீங்க..

Thu Jun 12 , 2025
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எஸ்.எஸ்.சி நிரப்பி வருகிறது. தற்போது மத்திய அரசின் 37 வகையான துறைகளில் மொத்தம் 14,582 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்கள் விவரம்: உள்துறை அமைச்சகம், அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, ஐபி உள்ளிட்ட துறைகளில் அஸ்சிஸ்டண்ட் செக்‌ஷன் ஆபீசர்( குரூப் பி) , வரித்துறையில், குரூப் சி பணியிடங்கள் என 37 வகையான பணியிடங்களில் மொத்தம் 14,582 காலிப் […]
ssc job

You May Like