விபத்துக்குள்ளான விமானத்தில் முதலில் தேடப்படுவது கருப்பு பெட்டி தான்..!! இதன் முக்கியத்துவம் என்ன..?

blackbox 1

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற ஏர் இந்தியா விமானம் அகமதாபாத்தின் மேகனி பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் தகவல்கள் தற்போது வெளியாகவில்லை. ஒரு விமானம் விபத்துக்குள்ளானவுடன், பயணிகளை மீட்பதற்கு முன் முதலில் தேடப்படுவது கருப்பு பெட்டி தான்.


ஒரு விமானம் எங்கும் விபத்துக்குள்ளானால், முதலில் விபத்துக்கான காரணம் கண்டறியப்படும். இதற்காக, அனைத்து நெறிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. விமான விபத்து நடந்த உடனேயே, உள்ளூர் நிர்வாகம், பாதுகாப்புப் படைகள் மற்றும் தீயணைப்புத் துறை போன்ற அவசர சேவைகள் அங்கு வருகின்றன.

கருப்பு பெட்டி முக்கியமானது ஏன்..? ஒரு விமான விபத்துக்குப் பிறகு, முதலில் தேடப்படுவது அதன் கருப்புப் பெட்டி. ஒரு விமானம் விபத்துக்குள்ளானதும், முதல் பணி பயணிகளை மீட்பதுதான். ஆனால் அதற்குப் பிறகு மிக முக்கியமாக தேடப்படுவது “கருப்பு பெட்டி” (Black Box) ஆகும். இது எந்த விமானத்திலும் கட்டாயமாக உள்ள தரவுப் பதிவு சாதனம். இதில் இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன:

FDR (Flight Data Recorder): விமானத்தின் வேகம், உயரம், பயண திசை, விமான இயக்கத்தின் முக்கிய அளவுகள் போன்றவை பதிவு செய்யப்படும்.

CVR (Cockpit Voice Recorder): விமானியின் குரல், காக்பிட் உரையாடல்கள், எதாவது எச்சரிக்கை சத்தங்கள் போன்றவை இதில் பதிவு செய்யப்படும்.

இந்த கருப்பு பெட்டியின் தரவுகளே விபத்து ஏன் நடந்தது, யார் பிழை செய்தார், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதா என்பதைக் கூறும் உண்மையான ஆதாரமாக இருக்கும். இதனை கருப்புப் பெட்டி என்று அழைத்தாலும், இது செம்மஞ்சள் நிறத்தில் காணப்படும். இந்த கறுப்பு பெட்டி விமானத்தின் சேதம் குறைவாக ஏற்படும் பின்பகுதியில் இவை பொருத்தப்பட்டிருக்கும்.

தண்ணீரில் விழுந்தாலும் தீயில் எரிந்தாலும் இதில் உள்ள தரவுகள் பாதுகாப்பாக இருக்கும். உவர் நீரில் ஊறினாலும் கறுப்பு பெட்டி பாதிப்படையாது. கடலுக்குள் மூழ்கினாலும் மூன்று மாதங்களுக்கு கறுப்பு பெட்டி பழுதடையாது. ஆகாயத்தில் இருந்து வீழ்ந்தாலும் கறுப்பு பெட்டி உடையாது. எங்கு வீழ்ந்தாலும் அவ்விடத்தில் இருந்து தகவல் அனுப்பிக் கொண்டிருக்கும். 

Read more: பாமக பொதுச்செயலாளரை காணவில்லை.. கண்டு பிடித்து கொடுத்தால் ரூ.100 பரிசு..!! – ராமதாஸ்

Next Post

ஏர் இந்தியா விமான விபத்து.. இதுவரை 30 பேர் உயிரிழப்பு.. பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அச்சம்..

Thu Jun 12 , 2025
குஜராத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் இதுவரை சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகே இன்று மதியம் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. 2 விமானிகள் மற்றும் 10 கேபின் பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்துள்ளனர். அனுபவமிக்க கேப்டன் சுமீத் சபர்வால் தலைமையில் முதல் அதிகாரி கிளைவ் குந்தர் தலைமையில் இந்த விமானம் இயங்கி வந்ததாக […]
air india crash

You May Like