இன்று அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 133 பேர் உயிரிழந்துள்ளனர். அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்தனர்.
விபத்துக்குள்ளான விமானம் மேகனி நகரில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது விழுந்தது. விடுதியில் மருத்துவ மாணவர்கள் உணவருந்திக் கொண்டிருந்த போது இந்த சோகம் அரங்கேறி உள்ளது. இதனால் அங்கிருந்த மருத்துவர்களின் கதி என்ன ஆனது என்ற கவலை எழுந்தது.
இந்த சூழலில் அகில இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் அக்ஷய் டோங்கார்திவே இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். விமான விபத்து காரணமாக சுமார் 20-30 மாணவர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறத். காயமடைந்த மாணவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் 5 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த அமைப்பு தனது ட்விட்டர் பதிவில் “அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான செய்தி கேட்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தோம். ! BJMC, விடுதியில் விமானம் நொறுங்கியது. பல MBBS மாணவர்களும் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியைக் கேட்ட பிறகு செய்திகள் மிகவும் கொடூரமானதாகிவிட்டன.. நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், எந்த உதவிக்கும் தயாராக இருக்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
Read More : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து.. பலி எண்ணிக்கை 133 ஆக உயர்வு.. குஜராத் விரையும் அமித் ஷா..