அஜித்குமார் லாக் அப் மரணம்.. ஜூலை 3-ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.. தவெக அறிவிப்பு..

FotoJet 9 1

சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடக் கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தவெக அறிவித்துள்ளது.

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இதுகுறித்த அறிவிப்பை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “ சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில், சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, வருகிற 03.07.2025 அன்று காலை 10.00 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை நமது கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.


Read More : மானாமதுரை டிஎஸ்பி பணியிட நீக்கம்.. அஜித் மரண வழக்கில் தமிழக அரசு அதிரடி..

RUPA

Next Post

44 இடங்களில் காயம்.. அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையை பார்த்து உள்ளம் நடுங்குது..!! - நீதிபதிகள்

Tue Jul 1 , 2025
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றவர் அஜித்குமார். நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதே அஜித்குமாரின் மரணத்திற்கு காரணம் என்று குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.. இந்த வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. இதனிடையே பிரேத பரிசோதனையில் இளைஞர் அஜித்குமாரின் […]
lock up death madurai hc 2025 07 01 13 09 18 1

You May Like