பரபரப்பு…! அஜித்குமார் படுகொலை.. நீதி கேட்டு இன்று காலை 10 மணிக்கு பாஜக – அதிமுக இணைந்து போராட்டம்…!

Edappadi 2025

திருப்புவனம் அஜித்குமார் படுகொலைக்கு நீதி கேட்டு இன்று காலை 10 மணிக்கு பாஜக – அதிமுக இணைந்து சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.


சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். போலீஸார் தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார்.

இதனிடையே இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸார் பிஎன்எஸ்எஸ் 190 (2) (ஏ) பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து நீதித்துறை விசாரணைக்கு அனுப்பப்பட்டது. இதனிடையே தனிப்படை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய 6 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பணியிடை நீக்கம் செய்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் திருப்புவனம் அஜித்குமார் படுகொலைக்கு நீதி கேட்டு இன்று காலை 10 மணிக்கு பாஜக – அதிமுக இணைந்து சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. அஜித்குமார் அவர்களின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டியும், அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்த உள்ளனர்.

இன்றைய தினம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பாஜக – அதிமுக இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில, மாவட்ட, மண்டல், கிளை நிர்வாகிகள், மற்றும் அணி, பிரிவு பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கூட்டணி அமைந்த பின்னர் அதிமுக-பாஜக இணைந்து நடத்தும் முதல் போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: டை பிரேக்கரில் வாக்களித்த ஜே.டி. வான்ஸ்!. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேறியது டிரம்பின் வரி மசோதா!.

Vignesh

Next Post

அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் மீது வழக்கு பதிவு...! காவல்துறை அதிரடி நடவடிக்கை...!

Wed Jul 2 , 2025
முருக பக்தர்கள் மாநாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் பேசியதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்து முன்னணி சார்பில், மதுரையில் கடந்த 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. அம்மாநாட்டில் அரசியல், மதம், பொது அமைதிக்கு எதிராகப் பேசக்கூடாது என்பன உள்ளிட்ட 52 நிபந்தனைகளை, மாநகர காவல் துறை விதித்திருந்தது. […]
524562 kannamalai 1

You May Like