அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு; 19 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரருக்கு கார் பரிசு..!

alanganallur jallikattu

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் மிகவும் பிரபலமானவை.. அந்த வகையில் நேற்று முன் தினம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்றது..


இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகளும், 600 மாடு பிடி வீரர்களும் களமிறங்கி உள்ளனர்.. சீறிப் பாயும் காளைகளின் திமிலை படித்து மாடு பிடி வீரர்கள் அடக்கினர்.. எனினும் சில காளைகளும் வீரர்களுக்கு பிடி கொடுக்காமல் டஃப் கொடுத்தன..

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 10 சுற்றுகளில் வெற்றி பெற்ற 37 வீரர்கள் இறுதி சுற்றில் பங்கேற்றனர்.. விறுவிறுப்பாக நடந்த இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கருப்பாயூரணி கார்த்தி 19 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார்..  பூவந்தி அபிசித்தர் 16 காளைகளை அடக்கி 2-வது இடம் பிடித்தார்.. பாசிங்காபுரத்தை சேர்ந்த ஸ்ரீதர் 3-வது இடம் பிடித்தார். முதலிடம் பிடித்த கார்த்திக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான கார் பரிசாக வழங்கப்பட்டது.. 2-ம் இடம் பிடித்த அபிசித்தருக்கு ட்ராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.. சிறந்த காளைக்கான முதல் பரிசாக காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது..

RUPA

Next Post

பெட் ரூமில் இந்த 3 பொருட்கள் இருந்தால், உடனடியாக அகற்றிவிடுங்கள்; இது திருமண வாழ்க்கையில் விரிசலை ஏற்படுத்தலாம்!

Sat Jan 17 , 2026
நாம் வசிக்கும் வீடு என்பது வெறும் செங்கல் மற்றும் சிமென்ட் சுவர்கள் மட்டுமல்ல, வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் அதன் சொந்த சக்தி உண்டு. குறிப்பாக, நாம் ஓய்வெடுக்கும் படுக்கையறை மிகவும் புனிதமானதாகவும் அமைதியானதாகவும் இருக்க வேண்டும். இருப்பினும், நாம் அறியாமல் செய்யும் சிறிய தவறுகள் வாழ்க்கையில் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக இந்த மூன்று பொருட்களை படுக்கையறையில் வைப்பது திருமண வாழ்க்கையில் விரிசல்களையும், மனதில் பதட்டத்தையும் […]
bedroom vastu

You May Like