உலகின் பல்வேறு நாடுகளில், அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் காணப்பட்டதை தொடர்ந்து, இந்த ஆண்டு வேற்றுகிரகவாசிகள் பூமியில் தரையிறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்கள் போன்று இருப்பார்களா? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உண்டு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு நமது விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்று பதிலளித்து உள்ளனர். தாமஸ் ஹேர் என்ற விஞ்ஞானி வேற்று கிரக வாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே கூட்டமாக உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போர், ராணி எலிசபெத்தின் மரணம், கோவிட் ஆகியவற்றை கணித்த நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் அதோஸ் சலோமி, அமெரிக்காவின் மிக ரகசியமான ஏரியா 51 விமான தளத்தில் அமைந்துள்ள நிலத்தடி போர்டல் வழியாக வேற்றுகிரகவாசிகள் இந்த ஆண்டு பூமியில் இறங்குவார்கள் என்று சமீபத்தில் கூறியிருந்தார்.

லாஸ் வேகாஸில் உள்ள சபையர் ஸ்டிரிப் கிளப், பாரிஸ், லண்டன், பிரேசில், சிலி மற்றும் ஜப்பானில் உள்ள ஈபிள் டவர் ஆகியவற்றின் மேலே UFO எனப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் காணப்பட்டதாக கூறப்பட்டது.மேலும் பிரித்தானியாவின் பிக் பென், ஸ்டோன்ஹெஞ்ச் மற்றும் ஸ்காட்லாந்தில் உள்ள போனிபிரிட்ஜ் ஆகியவை அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்களின் பிரபலமான ஹாட்ஸ்பாட் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் UFO பறக்கும் தட்டுகள் பற்றி ஆராய்ச்சி செய்து வரும், மாட் வெல்ஸ் தெரிவித்துள்ள தகவலிலும் வேற்று கிரக வாசிகள் நாம் நினைத்ததை விட மிக விரைவில் பூமிக்கு வருவதை அனைவரும் பார்க்க முடியும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.