தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவின் அதிரடி முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது கட்சி நிர்வாகிகளுக்குப் பிறப்பித்துள்ள ஒரு வாய்மொழி உத்தரவு, தற்போதைய ‘ஹாட் டாப்பிக்’ ஆக மாறியுள்ளது. திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளைத் தேமுதிகவினர் யாரும் தனியாகச் சந்திக்கக் கூடாது என அவர் தடை விதித்திருப்பது, கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
சமீபத்தில் கடலூர் மாவட்ட தேமுதிக நிர்வாகிகளுடன் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த தனிப்பட்ட சந்திப்பின் முடிவிலேயே, இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக தெரிகிறது. தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்த ரகசியங்கள் கசிவதை தவிர்க்கவும், கட்சி நிர்வாகிகளின் உறுதியை பரிசோதிக்கவும் இந்த நடவடிக்கையை அவர் எடுத்திருக்கலாம் என ஒருபுறம் பேசப்பட்டாலும், இது கூட்டணிக் கட்சிகளிடையே ஒருவித இடைவெளியை உருவாக்கியுள்ளது.
தேமுதிகவின் இந்த திடீர் தடை உத்தரவு அக்கட்சி தொண்டர்களை மட்டுமின்றி, திமுக மேலிடத்தையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக கூட்டணி கட்சிகளிடையே நிலவ வேண்டிய ஒருங்கிணைப்பு மற்றும் இணக்கமான சூழலுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் முட்டுக்கட்டையாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
Read More : தேசிய பொதுச்செயலாளர் ஆகிறார் அண்ணாமலை..? பாஜக மேலிடம் போட்ட மாஸ்டர் பிளான்..!! உற்சாகத்தில் தொண்டர்கள்..!!



