தமிழ்நாடு அரசு திரைப்படம், தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பிக்க ஜூன் 19ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் இளங்கலை காட்சிக்கலை (ஒளிப்பதிவு), இளங்கலை காட்சிக்கலை (எண்மிய இடைநிலை), இளங்கலை – காட்சிக்கலை (ஒலிப்பதிவு), இளங்கலை காட்சிக்கலை (இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல்), இளங்கலை காட்சிக்கலை (படத்தொகுப்பு), இளங்கலை காட்சிக்கலை (உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன்) ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்வதற்கான கால் அவகாசம் 15.06.2023 வரையிலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் 19.06.2023 வரையிலும் நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை www.tn.gov.in எனும் இணையதம் வாயிலாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
Next Post
ஜூன் 15ம் தேதி தமிழகத்திற்கு வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு !!
Tue May 30 , 2023
சென்னை கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த மருத்துவமனையை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று திறக்க தமிழக அரசு திட்டமிட்டது. இந்த மருத்துவமனையை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வரும் ஜூன் 5ஆம் தேதி திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜூன் 5ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் தமிழ்நாடு வருகை […]

You May Like
-
2023-01-01
அதிசய குழந்தை.. 50000 குழந்தைகளில் ஒன்று..!