சலுகைகளை அள்ளிக்கொடுக்கும் அமேசான்..!! ஆனா, இனி உங்களுக்கு வேலை இல்ல..!! ராஜினாமா பண்ணுங்க..!

இந்திய ஊழியர்களை வெறுமனே பணிநீக்கம் செய்யாமல் பல்வேறு சலுகைகள் அடங்கிய VSP என்ற திட்டத்துடன் வெளியேற்றுகிறது அமேசான் நிறுவனம்.


ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கை தொடர்ந்து, அமேசான் நிறுவனமும் இதுவரை இல்லாத அளவில் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகி வருகிறது. செலவினங்களை குறைக்க இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமேசான் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டு விட்டது என அமேசான் தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவிலும் அந்நிறுவனம் தனது பணிநீக்க நடவடிக்கையைத் துவங்கியுள்ளது.

சலுகைகளை அள்ளிக்கொடுக்கும் அமேசான்..!! ஆனா, இனி உங்களுக்கு வேலை இல்ல..!! ராஜினாமா பண்ணுங்க..!

இருப்பினும் அமேசான், இந்திய ஊழியர்களை வெறுமனே பணிநீக்கம் செய்யாமல் பல்வேறு சலுகைகள் அடங்கிய Voluntary Separation Program (VSP) என்ற திட்டத்துடன் வெளியேற்றுகிறது. இந்த திட்டத்தின்படி ஊழியர்கள் தானாக முன்வந்து பணியை ராஜினாமா செய்யும் வாய்ப்பை கொடுத்துள்ளது. VSP திட்டம் மூலம் ஊழியர்கள் நவம்பர் 30ஆம் தேதி காலை 6.30 மணிக்குள் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, பணியை ராஜினாமா செய்வதை அறிவிக்க வேண்டும். மேலும், VSP திட்டத்தைத் தேர்வு செய்வோருக்கு சில முக்கியச் சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளது.

சலுகைகளை அள்ளிக்கொடுக்கும் அமேசான்..!! ஆனா, இனி உங்களுக்கு வேலை இல்ல..!! ராஜினாமா பண்ணுங்க..!

VSP திட்டத்தைத் தேர்வு செய்வோருக்கு 22 வார அடிப்படை சம்பளம் மற்றும் ஒவ்வொரு 6 மாத பணியாற்றியதற்கு ஒரு வார அடிப்படை சம்பளம் அளிக்கப்படும். மேலும், 6 மாதத்துக்கு மருத்துவக் காப்பீடு அல்லது அதற்கு இணையான தொகை வழங்கப்படும். அடுத்ததாக வேலைவாய்ப்பு ஒப்பந்த அடிப்படையில் நோட்டீஸ் காலம் அல்லது சம்பளம் அளிக்கப்படும் என இந்திய அமேசான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

’உருட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா’..? போலீசாரின் பதிலை கேட்டு ஆடிப்போன நீதிமன்றம்..!!

Thu Nov 24 , 2022
பறிமுதல் செய்து வைத்திருந்த 581 கிலோ கஞ்சாவை எலிகள் திண்றுவிட்டதாக உத்தரப்பிரதேச மாநில போலீசார் அளித்த வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நாடு முழுவதும் கஞ்சா விற்பனை மறைமுகமாக நடைபெற்று வருவதால், அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா காவல் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் 700 கிலோ கஞ்சாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிலும் கடந்த 2018- 2019ஆம் […]
அடேங்கப்பா..!! எலிகளைப் பிடிக்கும் வேலைக்கு ரூ.1.38 கோடி சம்பளம்..!! வியக்க வைக்கும் அறிவிப்பு..!!

You May Like