சென்னை அருகே கோவிலம்பாக்கம் ராணி மகாலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தென் சென்னை மக்களவைத் தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் ஒரு முக்கிய ஆலோசனையை மேற்கொண்டு இருக்கிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று இருக்கிறார்கள். இந்த கூட்டத்தில் எதிர்வரும் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் குறித்து பல்வேறு முக்கிய ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் உள்ளிட்டவற்றை அமித்ஷா வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து இன்று மதியம் 2 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலமாக வேலூரை அடுத்துள்ள அப்துல்லாபுரம் விமான நிலையத்துக்கு வருகை தரும் அமித்ஷா, அங்கிருந்து கார் மூலமாக கந்தனேரி பொது கூட்ட மேடைக்கு செல்கின்றார். பொதுக்கூட்டம் முடிவடைந்த பிறகு மறுபடியும் கார் மூலமாக அப்துல்லாபுரம் விமான நிலையத்திற்கு சென்று ஹெலிகாப்டர் மூலமாக சென்னைக்கு வருகிறார்.
அதன்பின் வேலூரில் இருந்து சென்னைக்கு இரவு 9 மணி அளவில் வருகை தரும் அமித்ஷா, தனி விமான மூலமாக விசாகப்பட்டினத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.