மத்தியப்பிரதேசத்தில் செல்வந்தர் ஒருவர் தனது மகளின் தோழியுடன் வைத்திருந்த கள்ள உறவு, இறுதியில் கொடூரமான கொலையில் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 48 வயதான ரமேஷ் என்ற தொழிலதிபர், தனது மகள் பிரியாவின் தோழியான சோனியாவுடன் ரகசிய உறவில் இருந்துள்ளார். ஏழ்மையை சாதகமாக்கி ரமேஷ் ஆசை காட்ட, பணத்திற்காக சோனியாவும் இதற்குச் சம்மதித்துள்ளார்.
ஆனால், இந்த உறவின் பின்னணியில் சோனியாவின் காதலன் விக்ரம் என்பவன் இருந்து, ரமேஷிடமிருந்து பெரும் தொகையைப் பறிக்க திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரு கட்டத்தில், சோனியா 2 கோடி ரூபாய் பணம் மற்றும் சொத்துக்களைக் கேட்டு ரமேஷை மிரட்டியுள்ளார். இதற்கு ரமேஷ் மறுப்பு தெரிவிக்கவே, இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது.
சம்பவத்தன்று தனிமையில் இருந்தபோது ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த சோனியா ரமேஷின் ஆணுறுப்பை கடித்தும், தாக்கியும் சித்திரவதை செய்துள்ளார். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ரமேஷை அவரது மகள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி ரமேஷ் உயிரிழந்தார். முதலில் விபத்து என மறைக்க முயன்றாலும், காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் ரமேஷின் செல்போன் ஆதாரங்கள் சோனியாவை காட்டிக்கொடுத்தன.
இந்த கொலை வழக்கில் சோனியா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த காதலன் விக்ரம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தந்தை மற்றும் உயிர் தோழியின் இந்தத் துரோகத்தையும், அதன் விளைவாக நடந்த கொடூரத்தையும் கண்டு மகள் பிரியா நிலைகுலைந்து போயுள்ளார். பணத்தாசையும், முறையற்ற உறவும் ஒரு குடும்பத்தையே நடுத்தெருவிற்கு கொண்டு வந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : BREAKING | திமுக மூத்த தலைவர் எல்.கணேசன் காலமானார்..!! தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!



