திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு…

dc Cover 4ue75ephnt382p47rlain39m41 20160218071059.Medi

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி குடமுழுக்கு விழா, ஜூலை 7-ம் தேதி நடைபெற உள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் “ கேரள பாரம்பரிய முறைப்படி திருச்செந்தூர் முருகன் பூஜை செய்யப்படுகிறது. எனவே தற்போது நடைபெறும் திருப்பணிகள் கேரள முறைப்படி நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். குடமுழுக்கு நடைபெறும் போது ஹெலிகாப்டர் மூலம் புனித நீர் மற்றும் மலர்கள் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இது ஆகம விதிகளுக்கு எதிரானது. கும்பாபிஷேகம் நடைபெறும் போது கருடன் வானத்தில் வட்டமிடும். ஹெலிகாப்டர் பயன்படுத்தினால் இதுபோன்ற நிகழ்வு நடைபெறாது. இது பக்தர்களை பாதிக்கும். கேரள முறைப்படி திருப்பணிகள் நடைபெற்றுள்ளதா என்பதை ஆய்வு செய்து, அதன்பின்னரே கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்றும் அதுவும் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனு இன்று நீதிபதிகள் எஸ்.என். சுப்பிரமணியம், மரிய கிளிட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஏற்கனவே குழு அமைக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் மீண்டும் குழு அமைக்கக் கோருவது ஏற்புடையது அல்ல.. என்று கூறிய நீதிபதிகள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டனர். மேலும் இடைக்கால தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.

RUPA

Next Post

டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க தயார்... உயர்நீதிமன்றத்தில் ED அந்தர் பல்டி..

Wed Jun 18 , 2025
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனைங்களை திரும்ப ஒப்படைக்க தயார் என்று அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் மது விற்பனையில் முறைகேடு நடந்துள்ளதாகவும், சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகளில் திடீர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியது. 3 நாட்கள் நடந்த இந்த சோதனையில் ரூ.1000 கோடி […]
ed chennai high court 1

You May Like