கேரளாவில் மீண்டும் ஒரு பயங்கரம்..!! சிறார்களை வைத்து நரபலி பூஜை..?? சிக்கிய பெண் சாமியார்..!!

கேரளாவை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கியது கேரளாவில் நடைபெற்ற நரபலி பூஜை. இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது சிறுவர்-சிறுமிகளை அடைத்து வைத்து அவர்களைப் பூஜைகளுக்கு பயன்படுத்தியதாக பெண் சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கேரள மாநிலம் பத்தினம்திட்டா அருகே உள்ள மலையாளபுழா பகுதியில் வசந்தி அம்மா மடத்தில் பெண் சாமியார் ஷோபனா (52) வசித்து வருகிறார். இங்கு பல வருடமாக மந்திர செயல்கள் ஷோபனா தலைமையில் நடைபெற்று வந்துள்ளது. இந்த மந்திரவாதம் செய்யும் போது ஷோபனாவுக்கு தெரிந்த சிறுவர்- சிறுமிகளை பூஜைகளுக்குப் பயன்படுத்தி கொள்வது வழக்கம். அப்படி செய்யும் போது ஷோபனா, பூஜைகளுக்கு உதவி செய்ய வரும் சிறுவர்-சிறுமிகளை மயங்கி விழவும் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மந்திரவாதத்தில் ஈடுபடும் போது இவர் பலத்த குரல் எழுப்பி சிறுவர்களை பயமுறுத்துவாராம். ஷோபனாவின் பூஜைகள், மந்திரவாத நடவடிக்கைகள் குறித்து சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், போலீசார் யாரும் இதை அப்போது பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

கேரளாவில் மீண்டும் ஒரு பயங்கரம்..!! சிறார்களை வைத்து நரபலி பூஜை..?? சிக்கிய பெண் சாமியார்..!!

தற்போது நரபலியில் ஈடுபட்ட தம்பதியர் கைதான நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு பெண் சாமியார் ஷோபனா மீது மீண்டும் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, பத்தினம்திட்டா போலீசார், நேற்று பெண் சாமியார் ஷோபனாவின் மடத்துக்குள் நுழைந்து ஷோபனாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் சிறுவர்-சிறுமிகளை பூஜைகள், மந்திர தந்திரங்கள் செய்ய உதவியாக பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து பெண் சாமியார் ஷோபானா மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். மேலும் மடத்தில் இருந்த சிறுவர்-சிறுமிகள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

கேரளாவில் மீண்டும் ஒரு பயங்கரம்..!! சிறார்களை வைத்து நரபலி பூஜை..?? சிக்கிய பெண் சாமியார்..!!

இது தொடர்பாக பெண் சாமியாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பெண் சாமியார் ஷோபனாவும், சிறுவர்-சிறுமிகளை நரபலி கொடுப்பதற்காக பூஜைகள் நடத்தினாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். பெண் சாமியார் ஷோபனா நடத்தி வந்த மடத்தை, அவர் கைது செய்யப்பட்ட பின்னர், பொதுமக்கள் சூறையாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

CHELLA

Next Post

ரத்த காயத்துடன் போட்டியாளர் மகேஸ்வரி..!! பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறாரா..?

Fri Oct 14 , 2022
லக்சரி பட்ஜெட் டாஸ்கிற்கான போட்டியை விளையாடும் போது, அடிப்பட்டு ரத்தகாயத்திற்கு ஆளாகியுள்ளார் பிக்பாஸ் போட்டியாளர் மகேஸ்வரி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தினந்தோறும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. வழக்கமாக போட்டி தொடங்கினால், முதல் வாரம் கொஞ்சம் ரிலாக்ஸேசன் இருக்கும். ஆனால், இந்த முறை போட்டி தொடங்கியதுமே கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. வழக்கமாக, லக்சரி பட்ஜெட் டாஸ்க்கை குழுவாக சேர்ந்து விளையாடுவர். ஆனால், இம்முறை இந்த […]
ரத்த காயத்துடன் போட்டியாளர் மகேஸ்வரி..!! பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறாரா..?

You May Like