மன்னிப்பு கேளுங்கள் இல்லை என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும் என ஆதிபுருஷ் திரைப்படத்தின் இயக்குனருக்கு நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.
ஆதிபுருஷ் திரைப்படம் இயக்குனர் ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியாக உள்ளது. இதற்கான ட்ரெயிலர் சமீபத்தில் வெளியானது. அன்று முதல் பல்வேறு விமர்சனங்களை இந்த திரைப்பட ட்ரெயிலர் குவித்து வருகின்றது.

ஒருபுறம் வி.எஃப்.எக்ஸ் காட்சி அமைப்புகள் சரியில்லை என நெட்டிசன்கள் சமூக வலைத்தலத்தில் வறுத்து வருகின்றனர். ஒருபுறம் ராமாயணத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கிய திரைப்படம் என்பதால் அயோத்தியில் ட்ரெயிலர் வெளியிடப்பட்டது. இதில் அனுமன் கதாபாத்திரம் அவமதிக்கப்பட்டதாக குற்றசாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. கடவுள்களை பொருத்தமற்ற முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சர்வ பிராமண மகாசபா தேசிய தலைவர் சார்பில் வழக்கறிஞர் கமலேஷ் ஷர்மா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இப்படத்தில் காட்டப்பட்டுள்ள காட்சிகளில் இந்துக் கடவுள்களின் தோல்கள் மிகவும் சிதைந்து தோல் ஆடை அணிவிக்கப்பட்டு காட்டப்பட்டுள்ளது என குற்றம்சாட்டியுள்ளனர். மத உணர்வுகளை தூண்டி புண்படுத்தும் வகையில் இந்த கதைக்களம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத , ஜாதி வெறியை பரப்பும் வசனங்கள் இடம்பெற்றுள்ளது எனவும் இந்த படத்தில் அனுமன் கதாபாத்திரம் அவமதிக்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அனுமன் கதாபாத்திரத்தில் மீசையின்றி தாடி வைத்திருப்பது போல காட்டப்பட்டுள்ளது. ராமாயணத்தில் இஸ்லாமியமாக்கல் புகுத்தப்பட்டுள்ளது. ராமர் , சீதா தேவி , ஹனுமன் கதாபாத்திரங்கள் அவமதிக்கப்பட்டுள்ளன. இதில் ராவணணாக நடித்துள்ள சயீப் அலிகான் தைமூர் கில்ஜி போல இருக்கின்றார். நாட்டில்மத உணர்வுகளைத் தூண்டி குறிப்பிட்ட பிரிவினரிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தி வகுப்பினைவாதத்தை பரப்ப போகின்றது இந்த படம் . இது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பாதிப்பை ஏற்படத்தும். கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் படம் எடுத்துள்ளீர்கள் .. என அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களின் உணர்வுகளுடன் விளையாட வேண்டாம். நம்பிக்கையை களங்கப்படுத்த வேண்டாம். ராமாயணம் மற்றும் ராமசரிதையில் சித்தரித்தது போல காட்சிகள் இருக்க வேண்டும். எனவே சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்புவதன் மூலம் மேற்கண்டவற்றிற்கு ஏழு நாட்களில் மன்னிப்பு கேட்டு இதில் காட்டப்பட்டுள்ளவற்றை நீக்க வேண்டும் இல்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்…..