சூப்பர்…!மருந்துகளின் தன்மையை எளிதில் அறியும் வகையில் மொபைல் செயலி…! மத்திய அரசு அறிவிப்பு…!

மருந்துகளின் தன்மைகள் குறித்து எளிதில் அறியும் வகையில் விளையாட்டு வீரர்களுக்கு உதவ தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை செல்போன் செயலியை உருவாக்க உள்ளது மத்திய அரசு.

தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை ஊக்கமருந்து இல்லாத இந்திய விளையாட்டு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக மத்திய விளையாட்டுத்துறை செயலாளர் சுஜாதா சதுர்வேதி தெரிவித்துள்ளார்.


டெல்லியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் இந்தியா மற்றும் 20 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்டு பேசிய விளையாட்டுத்துறை செயலாளர் சுஜாதா சதுர்வேதி, பிரதமர் மோடியின் கேலோ இந்தியா உள்ளிட்ட விளையாட்டு போட்டி, தற்போது நடைபெற்று வருவதாகவும் இந்திய விளையாட்டு துறைக்கு மிக சிறந்த நேரம் என்றும் கூறினார். மருந்துகளின் தன்மைகள் குறித்து எளிதில் அறியும் வகையில் விளையாட்டு வீரர்களுக்கு உதவ தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை செல்போன் செயலியை உருவாக்க உள்ளதாக தெரிவித்தார்.

Vignesh

Next Post

போக்குவரத்து நெரிசல்..!! பள்ளி பேருந்துகளுக்கு அதிரடி உத்தரவு..!! காலை 8.15 மணி வரை தான் டைம்..!!

Sat Dec 3 , 2022
பள்ளி வாகனங்கள் காலை 8.15 மணிக்குள் மாணவர்களை பள்ளிக்குள் இறக்கி விட வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தினம்தோறும் காலை நேரத்தில் பள்ளிகளுக்கு அருகே உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதனால், அலுவலகத்திற்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில், அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, தற்போது பள்ளி பேருந்துகள் மற்றும் வேன்கள் பள்ளியின் வளாகத்திற்குள்ளேயே மாணவர்களை […]
1487943195school buses

You May Like