மத்திய அரசு வங்கியில் வேலை.. ஆரம்ப சம்பளம் ரூ. 70 ஆயிரம்! செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க..

Bank Jobs Recruitment.jpg 1

விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாடு தேசிய வங்கி (NABARD)யில் 44 இளம் வல்லுநர்கள் (Young Professionals) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக NABARD அறிவித்துள்ளது.


பணியிட விவரம்:

காலநிலை நடவடிக்கை மற்றும் நிலைத்தன்மை – 3
பொருளாதாரம் – 3
தரவு அறிவியல் – 4
சைபர் பாதுகாப்பு – 1
கல்வி நிர்வாகம் – 2
கிராப்பிக் டிசைன் – 1
பிஆர் – 2
தகவல் தொழில்நுட்பம் – 12
புவித் தகவலியல் – 1
மேம்பாட்டு மேனேஜ்மெண்ட் – 3
திட்ட கண்காணிப்பு – 4
நிதி – 6
UI/UX டிசைன் – 1
மென்பொருள் தேர்வு – 1
மொத்தம் – 44

வயது வரம்பு: 21 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். விண்ணப்பதார்கள் 01.11.2009 முன்னரும், 01.11.2004 பின்னரும் பிறந்திருக்கக்கூடாது.

கல்வித்தகுதி: இப்பணியிடங்களுக்கு அந்தந்த பிரிவிற்கு ஏற்ப இளங்கலை, முதுகலை பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், துறை சார்ந்த 1 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: இளம் வல்லுநர்களாக தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.70,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதார்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். கல்வி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதார்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.nabard.org/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.01.2026

Read more: கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் விளக்கம் கொடுத்த ஸ்டாலின்.. ஏற்க மறுக்கும் காங்கிரஸ்.. கூட்டணியில் என்னதான் நடக்கிறது..?

English Summary

Applications are invited for 44 Young Professionals posts at the National Bank for Agriculture and Rural Development (NABARD).

Next Post

தினமும் ரூ.185 சேமித்தால், ரூ.15.5 லட்சம் பெறலாம்.. எல்ஐசியின் இந்த புதிய பாலிசி பற்றி தெரியுமா?

Tue Dec 30 , 2025
காப்பீட்டுத் துறையின் மாபெரும் நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC), பல்வேறு தரப்பு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பல பாலிசிகளை அறிமுகப்படுத்துகிறது. ஏற்கனவே நூற்றுக்கணக்கான பாலிசிகள் உள்ளன. ஒவ்வொரு பாலிசியும் வெவ்வேறு வகையான பலன்களைக் கொண்டுள்ளது. எல்.ஐ.சி-யின் “ஜீவன் சாரல்” திட்டம் இரண்டு வகையான பலன்களை வழங்குகிறது. இதில், பாதுகாப்புடன், வாடிக்கையாளர்கள் சேமிக்கவும் முடியும். இறப்புப் பலன்களுடன், முதிர்வு காலத்தின்போது ஒரு பெரிய தொகையையும் பெறலாம்.வாரங்கலைச் சேர்ந்த […]
LIC 1

You May Like