நெருங்கும் ஆபத்து..!! விலகிச் சென்ற நிலா.!! விஞ்ஞானிகள் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

ஒரு கிரகத்தை சுற்றி வரும் பொருளுக்கு விஞ்ஞான உலகு கோள் எனப் பெயரிடப்பட்டுள்ளது. அவ்வாறு பூமியை சுற்றி வரும் இயற்கையான கோள் என்றால் அது நிலவு மட்டுமே. பூமிக்கு ஒரு நிலா இருப்பது போலவே, மற்ற கிரகங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட நிலாக்கள் உள்ளன. பூமி, சூரியன், நிலவு ஆகியவற்றின் இயக்கங்களே காலத்திற்கு ஏற்ப பூமியின் பருவ நிலை மாறுதல்களை தட்பவெட்ப சூழலை தக்க வைக்கிறது. ஈர்ப்பு விசையால் பூமி மற்றும் நிலா நிலையான தூரத்தில் மையம் கொண்டு சுற்றி வருவதாக விஞ்ஞானிகள் கூறி வந்தனர். இந்த சூழலில் தான் நாசா விஞ்ஞானிகளின் ஆய்வு புதிய தகவல்களை தந்துள்ளன. இந்த ஆய்வின்படி, நிலா தற்போது பூமியில் இருந்து தொடர்ந்து விலகி செல்வதாகவும், ஆண்டுக்கு 3.8. செமீ தூரம் என்ற அளவில் விலகுவதாகவும் தகவல் கூறுகின்றன. பூமிக்கும் நிலவுக்கும் இடையே இருக்கும் தூரம் சுமார் 3.84 லட்சம் கிமீ என்று தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது.


இந்த இடைவெளி மெல்ல அதிகரித்துக் கொண்டு போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுக்கு 3.8 செமீ என்ற விகிதத்தில் சுமார் 60,000 கிமீ தூரம் தற்போது நிலவு பூமியை விட விலகி சென்றதாக கூறப்பட்டுள்ளது. சுமார், 2.46 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய தொலைவை விட 60,000 கி.மீ நெருக்கமாக பூமி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமி மற்றும் நிலவு ஒரு குறிப்பிட்ட தொலைவை மையமாகக் கொண்டு ஒரே அச்சில் சுழல்வதை மிலன்கோவிச் சுழற்சி என்று அழைக்கிறோம். இந்த சுழற்சியை மையமாகக் கொண்டு தான் பூமிக்கு கிடைக்கும் சூரிய ஒளி, வெப்பம் ஆகியவை தீர்மானிக்கப்பட்டு, பூமியில் கால நிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, பூமியில் நிலவும் குளிர், வெப்ப பருவங்கள் நிலத்தின் தன்மைகள் உள்ளிட்ட அடிப்படைகள் அனைத்தும் இந்த மின்கோவிச் சுழற்சியின் தாக்கத்தால் நடைபெறுகிறது. பூமியில் இருந்து நிலவு விலகி செல்வதற்கும் இந்த மிலன்கோவிச் சுழற்சியில் ஏற்பட்ட மாற்றம் தான் காரணமாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதனால், பூமியின் இயக்கத்தில் ஏதேனும் பின்விளைவுகள் ஏற்படுமா, அபாயமான சூழல் உருவாகுமா என்ற கோணங்களில் ஆய்வுகள் நடத்தப்படவுள்ளன.

CHELLA

Next Post

”என்கிட்ட தப்பா நடந்துக்க பாத்தான்”..!! ஆண் நண்பருடன் நடுரோட்டில் சண்டையிட்ட துணை நடிகை..!! மதுரையில் பரபரப்பு

Mon Feb 27 , 2023
மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பைபாஸ் சாலையில், இளம் ஜோடி சண்டை காரில் இருந்து இறங்கி நடு ரோட்டில் சண்டை போட்டதால், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் உடனடியாக எஸ்எஸ்.காலனி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார், இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி பகுதியைச் சேர்ந்த விஸ்வநாத் பட்டாச்சாரியா என்பவரின் மகள் அங்கீதா பட்டாச்சாரியா என்பதும் அவர் துணை […]
”என்கிட்ட தப்பா நடந்துக்க பாத்தான்”..!! ஆண் நண்பருடன் நடுரோட்டில் சண்டையிட்ட துணை நடிகை..!! மதுரையில் பரபரப்பு

You May Like