நெருங்கும் புயல்..!! அதிகனமழை எச்சரிக்கை..!! 13 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?

டிசம்பர் 8ஆம் தேதி 13 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ”வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று தென் மேற்கு வங்கக்கடல் நோக்கி நகரும். டிச.8ம் தேதி காலையில் வட தமிழ்நாடு – புதுச்சேரி – தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டிய பகுதியை நோக்கி புயல் நகரக்கூடும்” என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நெருங்கும் புயல்..!! அதிகனமழை எச்சரிக்கை..!! 13 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?

இதன் காரணமாக டிசம்பர் 8ஆம் தேதி கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CHELLA

Next Post

#GUJARAT ELECTION : வீல் சேரில் வந்து வாக்களித்த மோடியின் தாயார்" வரிசையில் நின்று வாக்களித்த பிரதமர்" குடும்பத்துடன் வாக்களித்த அமித்ஷா...

Mon Dec 5 , 2022
குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி 89 தொகுதிகளில் டிசம்பர் 1ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் அகமதாபாத் உள்பட 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளில் காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்துக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அகமதாபாத்தில் இன்று வாக்களித்தனர். […]
gujrata election

You May Like