துருக்கியில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 2,700 ஆண்டுகள் பழமையான ஒரு கோவிலைக் கண்டுபிடித்துள்ளனர். ஐந்து நூற்றாண்டுகளாக இந்த நாடு மிகப்பெரிய இஸ்லாமியப் பேரரசான ஒட்டோமான் பேரரசின் மையமாக இருந்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நவீன நகரமான டெனிஸ்லிக்கு அருகில் காணப்படும் இந்தக் கோயில், கிமு 1200 முதல் 650 வரை இந்தப் பகுதியை ஆண்ட ஃபிரைஜியர்களின் காலத்திற்குச் சொந்தமானது என்று நம்பப்படுகிறது. ஃபிரைஜியன் பேரரசின் மிகவும் பிரபலமான ஆட்சியாளர் மிடாஸ் ஆவார்.
இந்த கோயில் ஒரு தாய் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது என்றும் அதனுடன் ஒரு புனித குகையும் காணப்பட்டது எனவும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.. ஃபிரைஜியர்களின் முக்கிய தெய்வங்களில் ஒன்று கருவுறுதல் மற்றும் இயற்கையுடன் தொடர்புடையதாக இருக்கலாம். அவர் மாதர் மற்றும் சைபெல் உட்பட பல பெயர்களால் அறியப்பட்டார்.
கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள் போன்ற பிற பண்டைய கலாச்சாரங்களிலும் பெண் தெய்வங்களை வழிபடுவது நடைமுறையில் இருந்ததாகவும், ஃபிரைஜியன் பேரரசுக்குப் பிறகும் வழிபாட்டு முறை தொடர்ந்ததாகவும் வரலாற்று சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன.
கண்டுபிடிக்கப்பட்ட புனித தளத்தில் ஒரு ஃபிரைஜியன் பாறை நினைவுச்சின்னம், ஒரு புனித குகை மற்றும் கட்டமைப்புகளில் இரட்டை கல் சிலைகள் உள்ளன என்று பமுக்கலே பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் பேராசிரியர் பில்ஜ் யில்மாஸ் கோலான்சி தெரிவித்தார்.
சிற்பங்கள் பாறையின் மேல் பகுதியில் செதுக்கப்பட்டுள்ளன. இந்த இடத்தில் பல காணிக்கை பாத்திரங்கள் மற்றும் வடிகால் வாய்க்கால்கள் உள்ளன என்று கோலான்சி குறிப்பிட்டார். தண்ணீரை ஊற்றுவது என்பது பெரும்பாலும் பண்டைய கலாச்சார சடங்குகளில் பயன்படுத்தப்படுகிறது, இன்றும் இந்து மதத்தில் பெரும் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்த இடம் தோராயமாக 2,800–2,600 ஆண்டுகள் பழமையானது என்பதை கோலான்சி உறுதிப்படுத்தினார்.
Read More : உலகின் மிகவும் ஆபத்தான இடம் இதுதான்! கடலுக்கு நடுவே மலை உச்சியில் அமைந்துள்ள இந்த இடம் பற்றி தெரியுமா?