அரசு, தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா? தமிழக அரசுக்கு பா.ரஞ்சித் கேள்வி..!

pa ranjith

2016 முதல் 2022 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், 2014 முதல் 2022 வரையிலான ஒன்பது ஆண்டுகளுக்கான சின்னத்திரை கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 13-ம் தேதி நடைபெறும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளார்.


அதன்படி, நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர் பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்களாகவும் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியர், அபர்ணா பாலமுரளி, சாய் பல்லவி, லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் சிறந்த நடிகைகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய படங்கள் சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன..

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளில் அங்கீகாரம் பெற்ற படங்களில் ஒன்று பா. ரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’. இந்தப் படத்திற்காக ஆர்யா சிறந்த நடிகருக்கான விருதையும், பசுபதி சிறந்த நடிகருக்கான சிறப்புப் பரிசையும் பெற்றனர். சாதி மற்றும் வர்க்கப் பிளவுகளை பேசிய இந்த படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வெல்லவில்லை.

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இயக்குனர் பா. ரஞ்சித் இதுகுறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ தமிழ் நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவித்துள்ள இச்சூழலில், உங்களிடம் ஒரு கேள்வி? தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்..

‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் தேசிய விருதுகளிலும் அங்கீகாரம் பெறவில்லை. ஒருவேளை, இதுவே இயக்குனர் பா. ரஞ்சித் மாநில மற்றும் தேசிய விருதுகள் குறித்து ஏமாற்றமடைந்ததற்குக் காரணமாக இருக்கலாம். இருப்பினும், பொதுவாக விருதுகள் மீதான தனது அதிருப்திக்கான காரணத்தை பா. ரஞ்சித் குறிப்பிடவில்லை.

ரஞ்சித், குறிப்பாக சாதி அடிப்படையிலான வன்முறை, தலித் உரிமைகள் மற்றும் சமூக நீதிக்கான கொள்கைகள் தொடர்பான விஷயங்களில், மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கத்தின் மீது வெளிப்படையாக விமர்சனம் வைப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More : புதுமண தம்பதியினர் 3 நாட்களுக்கு இதை செய்யக்கூடாது! இந்த விசித்திரமான சடங்கு எங்கு கடைப்பிடிக்கப்படுகிறது?

RUPA

Next Post

பிப்.,5-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்..!

Fri Jan 30 , 2026
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறுகிறது.. தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.. இந்த கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்க்ள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.. பிப்ரவரி 2-வது வாரத்தில் இடைக்கால் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.. இந்த பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு […]
tn cabinet meeting

You May Like