டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும் என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மெளலானா கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் எரிசக்தி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா, கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவதை தவிர்க்க டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டாஸ்மாக் கடைகளில் கள்ளச்சந்தைகளில் மது விற்கப்படுவது அதிகரித்து வருவதாகவும், அதனை தடுக்க வேண்டும் என்றால் டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் ஒரு மணி நேரம் நீட்டித்தால் கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவது தவிர்க்கலாம் என வேண்டுகோள் விடுத்தார்.