சமையலுக்குப் பயன்படுத்தக்கூடிய மசாலாப் பொருள்கள் நமக்கு வாசனையுடன் பல்வேறு உடல் ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது. குறிப்பாக, கிராம்பை எடுத்துக்கொண்டால் பல் வலி முதல் செரிமான பிரச்சனை, சளி தொல்லை, வயிறு எரிச்சல், உடல் எடைக்குறைப்பு போன்ற பலவற்றிற்கு தீர்வாக உள்ளது. இவ்வாறு பல்வேறு நன்மைகள் கொண்ட கிராம்பு டீ யை எப்படி தயார் செய்வது..? உடல் ஆரோக்கியத்தில் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்ததாக இது உள்ளது..? என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
கிராம்பு டீக்கு தேவையான பொருள்கள் :
* கிராம்பு – 4
* தண்ணீர் – 1 கப்
செய்முறை:
* ஒரு கனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இதனுடன் கிராம்புகளைப் போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்துவிடவும். இனிப்பு சுவையுடன் நீங்கள் கிராம்பு டீ சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் 2 ஸ்பூன் தேனைக் கலந்து சாப்பிடலாம்.
* நீங்கள் தயார் செய்யும் கிராம்பு டீக்கு அதிக சுவையைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் இதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்.
கிராம்பு டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
* கிராம்பில் அதிகளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இவற்றை நம்முடைய உணவு முறையில் சேர்த்துக்கொள்ளும் போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
* கிராம்பில் வைரஸ் எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் உள்ளதால் காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றிற்கு இந்த டீ பயனுள்ளதாக உள்ளது.
* கிராம்புகளில் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே அதிகளவில் உள்ளது. இது பாக்டீரியா தொற்றுக்கு எதிராக போராடுகிறது. எனவே, நீங்கள் அதிக காய்ச்சலில் இருக்கும் சமயத்தில் மாத்திரைகள் சாப்பிட்டாலும் கிராம்பு டீயை அருந்தினால் குணமாகும்.செரிமான பிரச்சனைக்கு தீர்வு காண்பதோடு, உடல் எடைக்குறைப்பிலும் இந்தச் டீ உதவியாக உள்ளது.
* ஈறு மற்றும் பல் வலி என்றாலே முதலில் கிராம்பு எங்கிருக்கிறது என்று தான் தேடுவோம். ஆம், இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஈறுகளின் வீக்கத்தைக் குறைத்து பல் வலிக்கு நிவாரணமாக உள்ளது. எனவே, நீங்கள் கிராம்பு டீ யை தயார் செய்து அருந்தும் போது, வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களையும் அகற்ற உதவியாக உள்ளது.
* சைனஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு கிராம்பு டீ சிறந்த மருந்தாக உள்ளது. இதில் உள்ள யூஜெனால் சளியை அகற்ற உதவுகிறது.
* கிராம்புகளில் கிருமி நாசினிகள் அதிகம் உள்ளதால், தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு தீர்வு தருகிறது.
* நாள்பட்ட மூட்டுவலி பிரச்சனை உள்ளவர்களுக்கும் கிராம்பு டீ தீர்வாக அமைகிறது. கிராம்பில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் வீக்கத்தைக் குறைத்து மூட்டு வலியைக் குறைக்க உதவுகிறது.
* சமீபத்திய ஆய்வின் படி, நாம் கிராம்பு டீ யை அருந்தும் போது, மன அழுத்தத்தைக் குறைக்க உதவுவது தெரியவந்துள்ளது.
இதுப்போன்று பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளதால், தினமும் கூட நீங்கள் கிராம்பு டீ யை எடுத்துக்கொள்ளலாம். அதே சமயம் ஒரு கப்பிற்கு மேல் நீங்கள் அருந்தக்கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும். ஒருவேளை நீங்கள் கிராம்பு டீ குடித்தவுடன் வாந்தி, குமட்டல் போன்ற ஏற்பட்டால் இதை அருந்துவதை முற்றிலும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.