கொசு விரட்டி பயன்படுத்துபவரா நீங்கள்..? பறிபோன 6 உயிர்..!! நடந்தது என்ன..? அதிர்ச்சி தகவல்..!!

கொசுவத்தி புகையால் மூச்சுத் திணறி ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மாநிலம் சாஸ்திரி பூங்கா பகுதியில் வசித்து வந்த ஒரு குடும்பத்தினர் கொசு தொல்லை காரணமாக இரவு தூங்குவதற்கு முன்பு கொசுவத்தி ஏற்றி வைத்து விட்டு தூங்கியுள்ளனர். இந்த நிலையில், கொசுவத்தியின் சுருள் பஞ்சு மெத்தையின் மீது விழுந்து தீப்பற்றி எரிந்து அறை முழுவதும் புகை மண்டலமாக மாறியுள்ளது. இதில், நச்சுத்தன்மை கொண்ட புகை அறைக்குள்ளயே இருந்ததால் தூக்கத்தில் சுவாசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


மேலும், 2 பேர் தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் 4 ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

CHELLA

Next Post

குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்..!! இந்த தேதியில் டாஸ்மாக் கடைகள் இயங்காது..!! ஆட்சியர் அதிரடி..!!

Fri Mar 31 , 2023
மகாவீர் ஜெயந்தி ஏப்ரல் 4 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் டாஸ்மாக் கடை, பார்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில், ஏப்ரல் 4ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த […]
large tasmac 56169

You May Like