பழைய வீட்டு மனை வாங்கி பத்திரப்பதிவு செய்ய போறீங்களா..? கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்..!

house register

தமிழ்நாட்டின் பெரும்பாலான நகரங்களை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகள் நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வருகின்றன. குறிப்பாக சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தின் மதிப்பு கணிசமாக உயர்ந்துவருகிறது. இதனால் பலர் வீடு கட்டும் நோக்கத்தில் வீட்டு மனையை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்நிலையில், பழைய வீட்டு மனை வாங்க விரும்பும் நபர்கள் சில முக்கியமான விசயங்களில் உஷாராக இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என ரியல் எஸ்டேட் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:

Encumbrance Certificate: வாங்க விரும்பும் நிலத்தில் ஏதேனும் பிணைப்பட்டதா அல்லது விலை நிலுவையிலா என்பதை தெரிந்து கொள்ள E.C. பார்க்க வேண்டும்.

பட்டா மற்றும் பத்திரம் உள்ள அளவு ஒன்றா? நிலத்தின் அளவுகளில் ஏதேனும் வேறுபாடு இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். பட்டா வாங்கும் போது பக்கத்து நிலத்தின் அளவையும் அடிப்படையாக வைத்து சில நேரங்களில் அளவு குறைந்துவிடும்.

பட்டா யாரின் பெயரில் உள்ளது? இப்போது நிலத்தை விற்கும் நபர் பெயரில்தானா பட்டா உள்ளது? இல்லையெனில், நீங்கள் வாங்கிய பிறகு பட்டா கிடைக்கும் வாய்ப்பு உள்ளதா? என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

நிலத்தின் வகை: அது பஞ்சமி நிலமா? ஆதிதிராவிடர்களுக்கானவா? குடிசை மாற்று வாரிய நிலமா? அரசு வழங்கிய சமுதாய உள்நிலமா? என்று விஏஓ அலுவலகத்தில் சென்று உறுதி செய்யுங்கள். இத்தகைய நிலங்களை அரசு விதிமுறைகளுக்குப் புறம்பாக வாங்கினால் பட்டா பெற முடியாது.
கோவில் நிலமா அல்லது நீர் நிலத்திற்குள் உள்ள நிலமா? இது போன்ற நிலங்கள் வழக்குவழிபாட்டுக்கு உட்பட்டவை, அல்லது அரசு ஆக்கிரமிப்பு வழக்குகள் இருப்பவை. வாங்கினால் எதிர்காலத்தில் நீக்கம் செய்யப்படும் அபாயம் உண்டு.

அங்கீகாரமில்லாத வீட்டு மனைகள்: ஊராட்சி அல்லது நகராட்சி அங்கீகாரம் இல்லாமல் விற்கப்படும் மனைகள் சட்டப்படி வீடு கட்ட அனுமதி பெற முடியாது. தவிர்க்கவேண்டும்.

கூட்டு பட்டா நிலங்கள்: ஒரே பட்டாவில் பல பேரின் பெயர்கள் இருந்தால் (கூட்டு பட்டா), அதில் உங்கள் பங்கு தெளிவாக பட்டாவில் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

வழக்கறிஞர் மூலம் ஆவண பரிசோதனை: நீங்கள் நிலத்தைப் பற்றி அதிகமாக அறியவில்லை என்றால், ஒரு சொத்துக் கணக்கு பார்க்கும் வழக்கறிஞர் மூலம் அனைத்து ஆவணங்களையும் பரிசோதிக்கச் சொல்லுங்கள். எந்த பிரச்சனையும் இல்லை எனத் தெரிவித்தால் மட்டுமே வாங்குவது பாதுகாப்பானது.

Read more: யாருகிட்ட.. அடி மடியிலேயே கை வைத்த ஈரான்.. பதறும் உலக நாடுகள்.. இந்தியாவுக்கும் ஆபத்து..

Next Post

மத மோதலை தூண்டும் வகையில் பேச்சு.. ஹெச். ராஜா நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

Mon Jun 23 , 2025
The Madras High Court has ordered BJP's H. Raja to appear in person in a case filed against him for allegedly inciting religious conflict.
TH17HRAJARAMANATHAPURAM

You May Like