தமிழ்நாட்டில் கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. விடுமுறையை சொந்த ஊரில் கொண்டாட பலரும் தற்போதே பயணங்களுக்கு திட்டமிட்டு விட்டனர். அதற்கேற்ப கோடைக்கால சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பையும் தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது. சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவும் தொடங்கியுள்ளது. தென்னக ரயில்வே இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
கோடைக்கால சிறப்பு ரயில்கள்:
தாம்பரம் – நெல்லை இடையே ஏப்ரல் 27, மே 4, 11, 18, 25 ஆகிய 5 நாட்கள் தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு திருச்சி, புதுக்கோட்டை, மானாமதுரை, விருதுநகர் வழியாக நெல்லையை அடையும்.
நாகர்கோவில் – தாம்பரம் இடையே ஏப்ரல் 23, 30, மே 7, 14, 21, 28, ஜூன் 4, 11, 18, 25, ஜூலை 2 ஆகிய 11 நாட்களில் நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும் ரயிலானது நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
நெல்லை – சென்னை எழும்பூர் இடையே ஏப்ரல் 28ஆம் தேதி மற்றும் மே 5, 12, 19, 26 ஆகிய 5 நாட்கள் நெல்லையில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.
தாம்பரம் – நெல்லை இடையே ஏப்ரல் 26, மே 3, 10, 17, 24 ஆகிய 5 நாட்களில் தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு ரயில் புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் போர்ட், மயிலாடுதுறை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக மறுநாள் காலை 11.15 மணிக்கு நெல்லை சென்றடையும்.
ரயில் எண் 06044 திருவனந்தபுரம் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் திருவனந்தபுரத்தில் இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நண்பகல் 12.45 மணிக்கு சென்றடையும். வரும் மே 3, 10, 17, 24, 31, ஜூன் 7, 14, 21, 28 ஆகிய நாட்களில் இயக்கப்படும்.
ரயில் எண் 06043 சென்னை எழும்பூர் – திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில். சென்னை எழும்பூரில் பிற்பகல் 2.25 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரத்திற்கு அடுத்த நாள் காலை 6.45 மணிக்கு சென்றடையும். வரும் மே 4, 11, 18, 25, ஜூன் 1, 8, 15, 22, 29 ஆகிய நாட்களில் இயக்கப்படும்.