சூப்பர் நியூஸ்…!தொழில் தொடங்க போறீங்களா…? அரசு வழங்கும் 35% மானியம் எப்படி பெறுவது…? முழு விவரம்…

பிரதம மந்திரியின்‌ வேலை வாய்ப்பு உருவாக்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்‌ மற்றும்‌ கூட்டுறவு வங்கிகள்‌ மூலமாக நிதி உதவியினை பெற்று புதியதாக தொழில்‌ தொடங்க ஆர்வம்‌ மிக்க தொழில்‌ முனைவோர்கள் எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை பார்க்கலாம்.

1005274 951759 money

இத்திட்டம்‌ காதி மற்றும்‌ கிராம தொழில்‌ வாரியம்‌, மாநில காதி மற்றும்‌ கிராமத்‌ தொழில்கள்‌ ஆணையம்‌ மற்றும்‌ மாவட்ட தொழில்‌ மையம்‌ மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில்‌ இந்த நிதிஆண்டு முதல்‌ உற்பத்தி தொழில்களுக்கு ரூ.50 லட்சம்‌ வரையிலான திட்டங்களும்‌, சேவைத்‌தொழில்களுக்கு, ரூ.20 லட்சம்‌ வரையிலான திட்டங்களும்‌ அனுமதிக்கப்படும்‌. பொது பிரிவு பயனாளிகளுக்கான மானியம்‌ ஊரகப்‌ பகுதியில்‌ தொடங்கப்படுவதற்குடமாத்த திட்ட மதிப்பீட்டில்‌ 25% எனவும்‌, நகர்‌ பகுதியில்‌ தொடங்கப்படுவதற்கு 15%எனவும்‌ நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட வகுப்பினர்‌, பழங்குடியினர்‌, இதர பிற்பட்ட வகுப்பினர்‌, சிறுபான்மையினர்‌, பெண்கள்‌, முன்னாள்‌ இராணுவத்தினர்‌, உடல்‌ ஊனமுற்றோர்‌ உள்ளிட்ட சிறப்பு பிரிவு பயனாளிகளுக்கு மானியம்‌ ஊரகப்‌ பகுதியில்‌ தொடங்கப்படுவதற்கு மொத்த திட்ட மதிப்பீட்டில்‌ 35% எனவும்‌, நகர்‌பகுதியில்‌ தொடங்கப்படுவதற்கு 25% எனவும்‌ நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

18 வயது பூர்த்தி அடைந்த படிக்காதவர்களும்‌, எட்டாம்‌ வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களும்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ உற்பத்தி தொழிலுக்கு ரூ.10 லட்சம்‌ வரையிலும்‌ சேவைத்‌ தொழிலுக்கு ரூ.5 லட்சம்‌ வரையிலும்‌ கடனுதவி பெறலாம்‌. உற்பத்தி தொழிலுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேலும்‌ சேவைத்‌ தொழிலுக்கு ரூ.5 லட்சத்திற்கு மேலும்‌ திட்ட மதிப்பீடு இருந்தால்‌ பயனாளி குறைந்த பட்சம்‌ 8 ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.

இந்த ஆண்டு முதல்‌ பயணிகள்‌ போக்குவரத்திற்கான வாகனங்கள்‌, மதிப்பு கூட்டப்பட்ட பால்‌ பொருட்கள்‌, ஆட்டு பண்ணை, மாட்டுப்பண்ணை, மீன்‌ வளர்ப்பு,தேனீ வளர்ப்பு மற்றும்‌ பட்டுப்புழு வளர்ப்பு போன்ற தொழில்‌ இனங்களுக்கும்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ மாவட்ட இலக்கீட்டில்‌ தலா 10% பயன்பெற அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும்‌, PMEGO & SUFRTI திட்டத்தில்‌ ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்களில்‌ உற்பத்தி செய்யப்படும்‌ பொருட்களை விற்பனை செய்யும்‌ விற்பனையகம்‌ அமைக்க ரூ.20 லட்சம்‌ வரை கடன்‌ அனுமதி வழங்கப்படும்‌. ரூ.2 லட்சம்‌ வரையிலான திட்டங்களுக்கு பயிற்சி தேவையில்லை. ரூ.5லட்சம்‌ வரையிலான திட்டங்களுக்கு 5 நாட்களும்‌ அதற்கு மேற்பட்ட திட்டங்களுக்கு 10 நாட்களும்‌ நேரடியாகவோ இணையதளம்‌ வாயிலாகவோ பயிற்சி பெற வேண்டும்‌. இந்தத் திட்டத்திற்கு www.kviconline.gov.in/pmegp என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Vignesh

Next Post

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பொங்கல் பரிசு...! மாதிரி டோக்கன்களை வெளியிட்ட அரசு...!

Wed Dec 28 , 2022
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு இவை வழங்கப்பட உள்ளது. பொங்கல் ரொக்கப் பணம் தமிழகத்தில் […]
பொங்கல் பண்டிகை முதல்..!! குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000..!! வங்கிக் கணக்கு பணிகள் தீவிரம்..!!

You May Like