நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் பெயர்: செவிலியர்
பணியிடம்: நாகை மாவட்டம்
காலியிடங்கள்: 69
வயது வரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்
ஊதியம்: ரூ.18,000
கல்வித்தகுதி:
இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
https://www.nagapattinam.nic.in/ என்ற மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம் முதல் நுழைவாயில், நாகப்பட்டினம் – 611003.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 28.01.2023 மாலை 5 மணி வரை