பொதுமக்களை பொறுத்தவரையில் தனியார் மற்றும் தேசிய வங்கிகளில் வீடு கட்டுவது மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவது, மேலும் கட்டிய வீட்டை புதுப்பிப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக வீட்டுக் கடனை வாங்குவதற்கு முயற்சி செய்வார்கள். ஆனால் அவர்கள் செய்யும் முயற்சி பெரிதாக பலனளிப்பதில்லை.
அதனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் கிராம வங்கி சார்பாக வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு போன்ற 6 மாவட்டங்களில் வரும் 15-ம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையில் சிறப்பு கடன் வழங்கும் முகாம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் விவசாய மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் சிறு, குறு நடுத்தர நிறுவனங்களுக்கு தமிழ்நாடு கிராம வங்கியின் மூலமாக பல களங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதே நேரம் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன் போன்ற கடன்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தான் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் வருகின்ற ஜூலை மாதம் 15ஆம் தேதி 20ஆம் தேதி வரைகள் சிறப்பு கடன் வழங்க முகாம் நடைபெற இருக்கிறது.
அந்த முகாமில் வீட்டு கடன், புதிய மற்றும் பழைய அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்க, வீட்டை புதுப்பிக்க, விரிவாக்கம் செய்வதற்காக, வீட்டுமனை வாங்கி வீடு கட்ட மற்றும் மற்ற வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் இருக்கின்ற வீட்டுக் கடனை மாற்றுவதற்கான கடன் வழங்கப்படும். இது தொடர்பாக கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள அந்தந்த பகுதிகளில் இருக்கின்ற தமிழ்நாடு கிராம வங்கி கிளை மேலாளரை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.