உங்கள் குழந்தைகள் செல்போனிலேயே மூழ்கி இருக்கிறார்களா..? பெற்றோர்களே இதை ஃபாலோ பண்ணுங்க..!!

உங்கள் குழந்தை நாள் முழுவதும் செல்போனையே பார்த்துக்கொண்டு இருப்பதாக கவலைப்படுகிறீர்களா? உங்களுக்கே நீங்கள் போனையே பார்த்துக் கொண்டு இருக்கிறேன். அதை குறைக்க வேண்டும் என்று தோன்றுகிறதா? ஆம், எனில் உங்களுக்கான தீர்வை ஆப்பிள் ஐபோன்கள் தருகின்றன. ஸ்க்ரீன் டைம் குறைக்க வழி இருக்கா என்று தானே யோசிக்கிறீர்கள். நிஜமாகவே இருக்கிறது. அதற்காகவே, ஐபோன்களில் ‘ஸ்கிரீன் டைம்’ அம்சம் உள்ளது. இது நீங்கள் எவ்வளவு நேரம் செல்போனில் மூழ்கி இருக்கிறீர்கள் என்பதை கண்காணிக்கும்.


ஆப்பிள் செட்டிங் பக்கத்தின்படி ஆப்ஸ், இணையதளங்கள் மற்றும் பல செயலிகளில் ஒருவர் எவ்வளவு நேரம் செலவிடுகிறார் என்பதை ஸ்க்ரீன் டைம் தெரியப்படுத்தும். இந்த வழியில், பயனர்கள் தங்கள் சாதனங்களை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை அவர்களே தெரிந்துகொள்ளலாம். எந்த செயலியை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறார் என்பதை தெரிந்துகொள்ளலாம். இது ஆப்பிள் ஐபோனிகள் மட்டும் இல்லாமல் ஆன்ட்ராய்டு போன்களிலும் உள்ளது.

  • உங்கள் ஆப்பிள் ஐபோனில் உள்ள செட்டிங்கிற்கு செல்லவும்
  • Screen Time-ஐ க்ளிக் செய்யவும்
  • இங்கே, Screen Time ஆன் செய்யவும். அதில் உங்கள் சாதனம் அல்லது உங்கள் குழந்தைகளது சாதனம் என்று பல ஆப்ஷன்கள் வரும். அதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

Screen Time இயக்கப்பட்டதும், உங்கள் ஆப் பயன்பாடுகள் மற்றும் இணையதளங்களை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைக் காட்டும் அறிக்கை உங்களுக்கு காட்டப்படும். அடுத்து, தனிப்பட்ட பயன்பாடுகளில் செலவிடும் நேரத்தைக் குறைக்க விரும்பினால், Apple iPhone ஒரு ‘ஆப் லிமிட்ஸ்’ அம்சத்தைக் கொண்டுள்ளது. இந்த அம்சத்தின் மூலம், தனிப்பட்ட ஆப் பயன்பாட்டு வரம்புகளுடன் பயன்பாட்டு வகைகளுக்கான தினசரி வரம்புகளை நீங்கள் அமைக்கலாம்.

பயன்பாட்டு வரம்புகளை அமைக்க:

  • Settings சென்று Screen Time செல்லவும்
  • இங்கே, App Limits option என்பத க்ளிக் செய்து செயலிகளை சேர்த்துகொள்ளவும்
  • பின்னர் உங்கள் விருப்பப்படி அந்தந்த நேரத்தில் பார்க்க விரும்பும் ஆப் பயன்பாடுகளைத் தேர்ந்தெடுக்கவும்.
  • வாரத்தின் எத்தனை நாட்கள் இந்த கால வரம்பு மற்றும் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். வார வேலை நாட்களுக்கு தனி கட்டுப்பாடு, வார இறுதிக்கு கட்டுப்பாடு என்று நிர்ணயித்து கொள்ளலாம்.

CHELLA

Next Post

எல்.ஐ.சி. வழங்கும் சூப்பர் திட்டம்..!! வீடு தேடி வரும் ரூ.1 லட்சம்..!! எப்படி பயன்பெறுவது..?

Thu Mar 23 , 2023
இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. (LIC) அறிமுகப்படுத்தியிருக்கும் திட்டம் தான் சாரல் பென்சன் திட்டம். இது ஒற்றை பிரீமியம் திட்டமாகும். இத்திட்டத்தின் தொடக்கத்தில் சுமார் 5% வருடாந்திர விகிதத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. இந்த எல்.ஐ.சி திட்டத்தின் கீழ், வருடாந்திரம் அல்லது உயிருடன் இருக்கும் வரை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டுக்கு தவணை செலுத்தும் வசதியை தேர்ந்தெடுக்கலாம். இத்திட்டத்தில் 40 முதல் 80 வயது வரை உள்ள அனைவரும் சேர […]
1money 1 e1676203827271

You May Like