உத்தரபிரதேசத்தில் விபத்தில் இறந்தவர்களை ஒரே இடத்தில் புதைக்க ஏற்பாடு…

உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் மக்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் குளத்தில் கவிழ்ந்த விபத்தில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கான்பூரில் உள்ள ஃபதே பூரில் சந்திரிகா தேவி கோயிலுக்கு 50 பேர் கிராம மக்கள் டிராக்டரில் பயணித்தனர். கதம்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிராக்டர் தடுமாறி குளத்தில் கவிழ்ந்தது. இதில் தலைகுப்புற விழுந்ததில் அனைவரும் நீரில் மூழ்கினர்.


தகவல் அறிந்து வந்த கிராம மக்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திலேயே 26 பேர் பலியான நிலையில் மேலும் 6 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகளும் பெண்களும் ஆவர்.

இறந்தவர்களுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். ’’கான்பூரில் நிகழ்ந்த டிராக்டர் விபத்தால் நான் துயரமுற்றேன். தஙக்ள் நெருங்கிய அன்பானவர்களை இழந்தஅனைவரும் உள்ளனர். காயமுற்றவர்களுக்கு பிரார்த்தனைகள் . ’’ என்றார்.

பிரதமர் மோடியும் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும் , படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமும் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதனிடையே இறந்த அனைவரையும் ஒரே இடத்தில் இறுதிச் சடங்கு செய்து அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராமமே அழுகுரலால் நிறைந்து உள்ளது. பார்ப்பவர்களின் கண்களை குளமாக்கும் வகையில் இந்த கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அடக்கம் செய்வதற்காக 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுடுகாட்டிற்கு 16 ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட உள்ளது.

Next Post

சென்னையில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி

Sun Oct 2 , 2022
சென்னை மதுரவாயல் பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பதிமூன்று வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுவாயல் வேல் நகர் பகுதியில் செந்தில்குமார் என்பவரின் மூத்த மகள் பூஜா (13) . விருகம்பாக்கத்தில் 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு பூஜாவுக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவரது பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.  காய்ச்சல் இருப்பது உறுதியான […]
மர்ம காய்ச்சல்

You May Like