பிக்பாஸ் வீட்டில் தனலட்சுமியிடம், அசீம் அத்துமீறி நடந்திருக்கும் செயல் குறித்து ரசிகர்கள் கண்டித்து வரும் பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பிக்பாஸ் வீடு பிரச்சனைகள் மற்றும் மீம்ஸ்-களுக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. கடந்த சீசன்களில் பாதிக்கு மேல் கொண்டுவந்த டாஸ்குகள் எல்லாம் இப்போதே கொடுத்து பிரச்சனைகளை கிளப்பி வருகிறார் பிக்பாஸ். அதற்கு ஏற்ப காரசாரமாக போட்டியாளர்களும் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த பிக்பாஸ் சீசனில் அசீம் சர்ச்சை மன்னனாக இருக்கிறார். காரசாரமாக விளையாட வேண்டும் என்பதற்காக வார்த்தைகளை அத்துமீறி பயன்படுத்துவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். பொம்மை டாஸ்கில் இது இன்னும் அவரிடம் அதிகமாக இருக்கிறது.

பொம்மையை வைக்க அனைவரும் ஒருவரையொருவர் கடுமையாக தள்ளிக் கொண்டனர். அப்போது ஷெரினாவுக்கு தலையில் அடிபட்டது. இதனால் போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், ஷெரினாவை தள்ளிவிட்டது தனலட்சுமி தான் என அஸீம் குற்றம்சாட்டினார். அதற்காக தனலட்சுமியை வழக்கம்போல் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டத் தொடங்கினார் அசீம். “நீயெல்லாம் ஒரு பொண்ணா. இப்படி தள்ளிவிடுற” என அவர் கேட்டார்.

நான் தள்ளிவிடவில்லை, நானும் தான் கீழே விழுந்தேன். நான் தள்ளிவிட்டதை வீடியோவில் நிரூபித்தால் நான் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன். இல்லையென்றால் எல்லோரும் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பதிலடி கொடுத்தார் தனலட்சுமி. மேலும், அஸீம் தன்னை பார்த்து கேட்ட கேள்விகள் குறித்து பிற போட்டியாளர்களிடம் கூறி கண்ணீர்விட்ட தனலட்சுமி, தன் மீது எங்கே கைவைத்தான் தெரியுமா? என ஆவேசமாக பேசுகிறார். இதற்கு விக்ரமன், அஸீமிடம் கடுமையாக வாக்குவாதம் செய்கிறார். இதனையெல்லாம், கமல்ஹாசன் கண்டிப்பாக சுட்டிக்காட்டி, அசீமை கண்டிக்க வேண்டும் என்ற பார்வையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.