அடேங்கப்பா..!! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..!! 108 வேட்பாளர்களை களமிறக்கும் சங்கம்..!!

ஈரோடு இடைத்தேர்தலில் 108 வேட்பாளர்களை களமிறக்க உள்ளதாக ஈரோடு மாநகர மக்கள் மேம்பாட்டு சங்கம் அறிவித்துள்ளது.


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் இன்னும் ஓரிரு தினங்களில் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரோடு மாநகர மக்கள் மேம்பாட்டு சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. அதில், ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா அருகே சிஎஸ்ஐ நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 12.66 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமானது என இரண்டு மாதங்களுக்கு முன் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

நிலத்தை அரசு கையகப்படுத்தவும், அந்த நிலத்தின் வழியாக செல்லும் 80 அடி சாலை திட்டத்தை நிறைவேற்றவும் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 108 வேட்பாளர்களை களமிறக்க உள்ளதாக ஈரோடு மாநகர மக்கள் மேம்பாட்டு சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நிலமீட்பு இயக்கம் மற்றும் ஈரோடு மாநகர மக்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் ஈரோட்டில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 108 வேட்பாளர்களை போட்டியிட வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

CHELLA

Next Post

கள்ளக்காதலியை தொழிலதிபருக்கு விருந்தாக்கி பணம் பறித்த கும்பல்..!! பலே பிளான்..!! சிக்கியது எப்படி..?

Tue Jan 31 , 2023
கள்ளக்காதலியை பழக வைத்து, தொழிலதிபரிடம் பணம் பறித்த வழக்கில் பெண் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த கானகோயில்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (40). இவர், மறைமலை நகர் அடுத்த மகேந்திரா சிட்டி பகுதியில் பல்வேறு தனியார் தொழிற்சாலைகளுக்கு, தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அனுப்பும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் தொழிலாளர்களின் பிஎஃப் பணத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தாமல் […]
Sex 1 e1668568953180

You May Like