தமிழ்நாட்டில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இம்மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில், மாணவர்கள் மார்ச் 3ஆம் தேதியில் இருந்து பள்ளிகள் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் சா.சேதுராமன் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் இணை இயக்குநர் எழுதியுள்ள கடிதத்தில், “மேல்நிலை 2ஆம் ஆண்டு பொதுத்தேர்வுகள் தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID, Password கொண்டு தங்கள் பள்ளி மாணவர்களது ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட்டை சரியான முறையில் விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 5ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. அதேபோல், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 6ஆம் தேதி வரை தேர்வு நடைபெறவுள்ளது.