பெற்றோர்கள் கவனத்திற்கு!… தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை!… மே 18 வரை விண்ணப்பிக்கலாம்!…

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை பெற மே 18ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை குழந்தைகள், 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், ஏழை குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-2024-ம் கல்வியாண்டிற்கான தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை ஏப்ரல் 20ம் தேதி தொடங்கியது. தங்களது பிள்ளைகளுக்கு இலவச சேர்க்கை பெற விரும்பும் பெற்றோர்கள் வரும் மே 18-ந்தேதி வரை rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், விண்ணப்பிக்கும் குழந்தைகள் 2019 ஆகஸ்டு 1-ந் தேதியில் இருந்து 2020-ம் ஆண்டு ஜூலை 31-ந் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். 1-ம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 2017 ஆகஸ்டு 1-ஆம் தேதியில் இருந்து 2018-ம் ஆண்டு ஜூலை 31- தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser3

Next Post

அடுத்த ஷாக்!... 10,000 பேரை பணி நீக்கம் செய்ய மெட்டா நிறுவனம் முடிவு?

Fri Apr 21 , 2023
பொருளாதார சரிவை சந்தித்து வருவதால் மேலும் 10,000 பேரை பணிநீக்கம் செய்ய மெட்டா நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச அளவில் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் பொருளாதார சரிவை சந்தித்து வருகின்றன. இதன்காரணமாக கூகுள், ட்விட்டர், அமேசான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் கடந்த 10 மாதங்களில் லட்சக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. குறிப்பாக மெட்டா நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்து அதிர்ச்சியளித்தது. இந்நிலையில்தற்போது மீண்டும் […]
meta

You May Like