நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.. இந்நிலையில் ஏப்ரல் பாதி வரை வெப்ப அலைகள் ஏற்படாது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.. ஆனால் மே மற்றும் ஜூன் மாதங்களில் வெப்பநிலை இயல்பை அளவை விட உயரும் என்றும், வெப்ப அலை நாட்களின் எண்ணிக்கை ஆண்டு சராசரியை விட அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஏப்ரல் 15-ம் தேதிக்குப் பிறகு பல பகுதிகளில் வெப்பநிலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. குறிப்பாக பீகார், ஒரிசா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற கடலோரப் பகுதிகளில் வெப்ப அலைகள் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பொதுமக்கள் பிற்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் குழந்தைகள், வயதானவர், கர்ப்பிணிகள் முடிந்த வரை வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஒரு வேலை வெளியே செல்ல வேண்டி இருந்தால் குடை, உடலை முழுதாய் மறைக்கும் பருத்தி ஆடைகளை பயன்படுத்த வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பழங்களை அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அதிக தண்ணீரை பருக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் சூடு, தோலில் எரிச்சல், வாந்தி, மயக்கம், தலைவலி உள்ளிட்டவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடைகால நோய்களுக்கான மருந்துகளை கைவசம் வைத்திருத்தல் போன்ற அத்தியாவசிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.