நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியின் நெட் பேங்கிங் சேவை சில நாட்களுக்கு தடைபடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எஸ்பிஐயின் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் நெட் பேங்கிங் தொடர்பான சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
எஸ்பிஐ நெட் பேங்கிங் சேவை
எஸ்பிஐ தனது வலைத்தளத்தில் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நெட் பேங்கிங்கைப் பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படும் என்று கூறியது. நெட் பேங்கிங்கில் உள்ள இந்தப் பிரச்சனை ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும், அதன் பிறகு பயனர்கள் நெட் பேங்கிங்கை பயன்படுத்தலாம்.
எஸ்பிஐ நெட் பேங்கிங் எந்த நேரத்தில் இயங்காது?
எஸ்பிஐயின் நெட் பேங்கிங் ஒவ்வொரு நாளும் அதிகாலை 4.45 மணி முதல் அதிகாலை 5.45 மணி வரை சிறிது நேரம் தடைபடும். வழக்கமான பராமரிப்பு காரணமாக இந்த சிரமம் ஏற்படும், இதனால் வாடிக்கையாளர்கள் சிறந்த வசதிகளைப் பெற முடியும்.
இதுகுறித்து எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள தகவலில்”அன்புள்ள வாடிக்கையாளரே, எங்கள் வழக்கமான வங்கி பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக, தினமும் அதிகாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை 3 முதல் 4 நிமிடங்கள் வரை நீங்கள் தடங்கலை சந்திக்க நேரிடும். சிரமத்திற்கு மன்னிக்கவும்” என்று தெரிவித்துள்ளது.. இந்த குறிப்பிட்ட நேரத்தை மற்ற நேரங்களில் நெட் பேங்கிங் சேவை தடையின்றி கிடைக்கும் என்பதால் பயனர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது.
Read More : 8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. சம்பள உயர்வு மட்டுமல்ல.. மேலும் பல சலுகைகள்..