டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு..!! தேர்வு மையங்கள் திடீர் மாற்றம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது வன பாதுகாவலர் பதவிக்கான முதற்கட்ட தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு மையங்கள் பற்றி டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இந்த தேர்வு மையங்கள் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

WhatsApp Image 2023 04 21 at 7.21.57 AM

வருகின்ற மே 3ஆம் தேதி நடைபெற உள்ள முதற்கட்ட தேர்வுகள் சில நிர்வாக காரணங்களால் 22 மாவட்ட மையங்களில் மட்டுமே நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அறிவிக்கப்பட்டுள்ள முதல் கட்ட தேர்வுக்கான மாவட்ட மையங்களை தேர்வு செய்த விண்ணப்பதாரர்கள் இந்த 22 மையங்களில் ஏதேனும் ஒன்றில் எழுத மீண்டும் ஒதுக்கப்படுவார்கள் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

CHELLA

Next Post

விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடத்தில் வெடித்து சிதறியது உலகின் மிகப்பெரிய ராக்கெட்...!

Fri Apr 21 , 2023
உலகின் மிக சக்திவாய்ந்த ராக்கெட் என கருதப்படும் ஸ்டார் சிப் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது. ஆனால் இது ஒரு வெற்றிகரமான சோதனை என SpaceX நிறுவனம் தெரிவித்துள்ளது. Space X நிறுவனம் இதுவரை உலகில் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகளிலேயே மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த ரொக்கெட்டை வியாழன் காலை விண்ணில் ஏவியது. அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸில் உள்ள போகா சிகாவிலிருந்து ஸ்டார்ஷிப் ரொக்கெட் ஏவப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் […]
images 2023 04 21T072533.658

You May Like